states

இளையராஜா மேல் முறையீடு: பதிலளிக்க உத்தரவு

சென்னை, ஏப்.4- கடந்த 1980-களில் வெளியான 20 தமிழ் திரைப்படங்களின் இசையை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து, இசை யமைப்பாளர் இளையராஜா தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்கில் இன்ரிகோ உள்ளிட்ட 3 நிறுவனங்கள் பதி லளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. பிரபல இசையமைப்பாளர் இளைய ராஜா இசையமைத்து, 1978 -80களில் வெளி யான, 20 தமிழ் படங்கள், 5 தெலுங்கு, 3 கன்னட, 2 மலையாளம் என மொத்தம் 30 படங்களின் இசைப் பணிகளுக்கு, படத் தயாரிப்பாளர்களிடம் இருந்து காப்பு ரிமை பெற்றுள்ளதால், இந்த படங்களின்  இசையை பயன்படுத்த இளையராஜா வுக்கு தடை விதிக்கக் கோரி இந்தியன் ரெக்கார்டு உற்பத்தி நிறுவனம் சென்னை  உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந் திருந்தது. இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி,  இந்த 30 படங்களின் இசை, இந்தியன் ரெக்கார்டு கம்பெனிக்கு சொந்தமானவை எனக்கூறி, அவற்றை பயன்படுத்த இளைய ராஜா மற்றும் இரு மியூசிக் நிறுவனங்க ளுக்கு தடை விதித்து கடந்த 2020 பிப்ரவரி யில் உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து இளையராஜா தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.  இந்த வழக்கு நீதிபதிகள் துரை சாமி மற்றும் தமிழ்ச்செல்வி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. இந்த, மனுவுக்கு 4 வாரங்க ளில் பதிலளிக்க இந்தியன் ரெக்கார்டு கம்பெனி உள்ளிட்ட மூன்று நிறுவனங்க ளுக்கு உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தனர்.