states

யானை நடந்து செல்லும் சாலை... இதுவே பாஜக அமைத்த சாலையாக இருந்தால்..?

லக்னோ, ஜூலை 31 - தனது ஆட்சியில் அமைக்கப்பட்ட நெடுஞ்சாலையில் யானை நடந்து செல்லும் வீடியோவை வெளியிட்டு, பாஜகவை அகிலேஷ் கிண்டல் செய்துள்ளார். உத்தரப்பிரதேசத்தின் சித்திரகூடம் மாவட்டத்தையும் தில்லியையும் இணைக்கும் வகையிலான 4 வழி எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலையை ஜூலை 16-ஆம் தேதி பிரதமர் மோடி திறந்து வைத்தார். 296 கிலோமீட்டர் நீளம் கொண்ட இந்த 4 வழி நெடுஞ்சாலை அம்மாநிலத்தின் 7 மாவட்டங்களை கடந்து செல்லும் நிலையில், இந்த சாலைக்கு பந்தேல்கண்ட் எக்ஸ்பிரஸ் சாலை என பெயரிடப்பட்டது. ரூ. 14 ஆயிரத்து 850 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்ட இந்தச் சாலையில், திறந்துவைத்த நான்கே நாட்களில், ஒரு கனமழையைத் தாங்க  முடியாமல் தண்ணீரோடு தண்ணீராக கரைந்தோடியது. குறிப்பாக, சிரியா சலீம்பூர் பகுதியில் ஒன்றரை அடி ஆழத்திற்கு பள்ளம் ஏற்பட்டு, சாலையே இரண்டாக உடைந்தது. இது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பிரதமர் மோடி திறந்து வைத்த சாலையில் தரம் குறித்து பலரும் கேள்விகளை எழுப்பினர். இந்நிலையில், தனது ஆட்சி காலத்தில் அமைக்கப்பட்ட சாலையில் யானை செல்லும் வீடியோவை பதி விட்டு சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ், ஆளும் பாஜகவை கிண்டல் செய்துள்ளார். “கட்டுப்பாடுகள் இருந்தபோதும் சமாஜ்வாதி கட்சியால் வலிமையாக கட்டப்பட்ட ஆக்ரா - லக்னோ எக்ஸ்பிரஸ் யானை நடந்து செல்கிறது. இதுவே யானை தவறுதலாக பந்தேல் கண்ட் எக்ஸ்பிரஸ் சாலையில் (பாஜக ஆட்சியில் அமைக்கப்பட்டது) நடந்து சென்றிருந்தால் எடை தாங்காமல் சாலை இடிந்து விழுந்திருக்கும். யானைக்கும் காயம் ஏற்பட்டிருக்கும். எக்ஸ்பிரஸ் சாலைக்கான பாது காவலர்கள் (பிரதமர் மோடி, முதல்வர்  ஆதித்யநாத்) எங்கே?” என்றும் டுவிட்ட ரில் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.