states

மழை பாதிப்பு இல்லையென்றால் காய்கறிகள் விலை குறையும்

சென்னை,ஜூலை 23- சென்னை கோயம்பேடு, காய்கறி சந்தைக்கு  தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் ஆந்திரா, தெலுங் கானா, கர்நாடகா,கேரளா, உத்தர பிரதேசம் மகாராஷ்டிரா ஆகிய மாநி லங்களில் இருந்து காய்கறிகள் விற்ப னைக்கு வருகிறது. ஞாயிறு காலை கோயம்பேடு சந்தைக்கு 35 லாரிகளில் தக்காளி உட்பட மொத்தம் 450-க்கும் மேற்பட்ட  லாரிகளில் காய்கறிகள் விற்பனைக்கு வந்தன. ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பரவலாக பெய்த மழையால் உற்பத்தி பாதிக் கப்பட்டதால் கோயம்பேடு சந்தைக்கு வரும் தக்காளியின் வரத்து பாதியாக குறைந்து போனதால் கடந்த மாத இறுதியில் தக்காளி விலை திடீரென அதிகரிக்க தொடங்கியது. ஒருகிலோ தக்காளி ரூ.130ஐ கடந்து விற்கப்பட்டது. தற்போது தக்கா ளியின் விலை மெல்ல மெல்ல குறைய தொடங்கி உள்ளது. மொத்த விற்பனையில் அதன் விலை ரூ.100-க்கு கீழ் குறைந்து விற்கப்படுகிறது. சனிக்கிழமை 40 லாரிகளில் இருந்த தக்காளியின் வரத்து ஞாயிறன்று  35லாரிகளாக குறைந்து உள்ளது. இதனால் மொத்த விற்பனையில் முதல்ரக தக்காளி ஒரு கிலோ ரூ.90க்கும் சில்லரை விற்பனை கடைகளில் ஒரு கிலோ ரூ110-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோல் வரத்து குறைவால் தொடர்ந்து ஏறுமுக மாகவே இருந்து வந்த பீன்ஸ்,  பச்சை மிளகாய், இஞ்சி ஆகியவற் றின் விலை தற்போது படிப்படியாக குறைய தொடங்கி உள்ளது. மொத்த விற்பனையில் ஒரு கிலோ பீன்ஸ் ரூ.70-க்கும், இஞ்சி ஒரு கிலோ ரூ.210-க்கும், பச்சை மிளகாய் ஒரு  கிலோ ரூ.60-க்கும் விற்பனை செய்யப் பட்டு வருகிறது. பச்சை காய்கறி களான கத்தரிக்காய், அவரைக்காய், வெண்டைக்காய், பாகற்காய், முருங் கைக்காய் உள்ளிட்ட காய்கறி களின் விலை கணிசமாக குறைந்து  உள்ளது குறிப்பிடத்தக்கது. இதேபோல் பெரிய வெங்காயம் விலை யும் சரிந்து மொத்த விற்பனையில் கிலோ ரூ.20-க்கும், சில்லரை விற்பனையில் ரூ.25-க்கும் விற்பனை செய்யப்படு கிறது. இனி வரும் நாட்களில் மழை பாதிப்பு ஏதுமின்றி உற்பத்தி நடக்கும் பட்சத்தில் தக்காளி  உள்ளிட்ட பச்சை காய்கறிகள் விலை அடுத்த வாரத்தில் மேலும் குறைய வாய்ப்பு உள்ளதாக மொத்த வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.