வீட்டு உபயோக சிலிண்டரின் விலை இன்று மீண்டும் ரூ.50 உயர்த்தப்பட்டுள்ளது பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
சர்வதேச கச்சா எண்ணெய் விலைக்கு தகுந்தபடி எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை மாற்றி வருகின்றன. இந்நிலையில் கொரோனா பெருந்தொற்றை தொடர்ந்து ஏழை, எளிய, நடுத்தர மக்களின் வாழ்க்கையில் எரிபொருள்களின் விலை உயர்வு என்பது கடும் நெருக்கடியை ஏற்படுத்தி வருகிறது.
கடந்த மே 7ஆம் தேதி முதல்முறையாக ஆயிரத்தைக் கடந்த வீட்டு உபயோக சிலிண்டரின் விலை ரூ. 1,015ஆக இருந்தது. தொடர்ந்து மே 19ஆம் தேதி ரூ. 1,018.50ஆக அதிகரிக்கப்பட்டது.
இந்நிலையில், இன்று ரூ. 50 உயர்த்தப்பட்டதை அடுத்து சென்னையில் வீட்டு உபயோக சிலிண்டரின் விலை ரூ. 1,068.50-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
மேலும், வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ. 8.50 குறைக்கப்பட்டுள்ளது.
புதிய விலைப் பட்டியல்:
டெல்லி: ரூ.1052.50
சென்னை: ரூ.1068.50
மும்பை: ரூ.1,002.50.
கொல்கத்தா: ரூ.1079
இந்நிலையில் கடந்த 4 மாதங்களில் மட்டும் ரூ.103 விலை உயர்ந்துள்ளது