சென்னை, மே 3- கள்ளக்குறிச்சி மாவட்டம் வடக்குதாங் கல் கிராமத்தில் சிலர் நீர்நிலைகளை ஆக்கி ரமித்து விவசாயம் செய்து வருவதால், மழைக்காலத்தில் நீர்நிலைகளில் நீர் தேங்காமல், மழைநீர் வீணாவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, செயல் அலுவலரிடம் கேள்வி எழுப்பியபோது, சாலை அமைக்க நிதி ஒதுக்கப்பட்டதால் வேறு இடத்தைத் தேட முடியாது என்பதால் தார் சாலை அமைக்க முடிவு செய்துள்ளாதாக அவர் தெரிவித்ததாக உயர்நீதிமன்றத்தில் கிராம மக்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் குறிப்பிட்டுள்ளனர். இதுதொடர்பாக கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே மனு மீது நடவடிக்கை எடுக்ககோரியும், நீர்நிலை மற்றும் மயான புறம்போக்கு நிலத்தின் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிடக்கோரியும் அவர்கள் கோரியி ருந்தனர். இந்த மனு நீதிபதிகள் துரைசாமி மற்றும் தமிழ்செல்வி முன்பு விசார ணைக்கு வந்தபோது வழக்கு தொடர்பாக தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசார ணையை ஜூன் 7ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.