சென்னை, ஆக.4 - தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி தொடுத்த வழக்கில் கிருஷ்ணகிரி சாணமாவு கிராமத்தில் தலித் மக்களின் நிலவுரிமை மீட்கப்பட்டுள்ளது. உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை தீண்டாமை ஒழிப்பு முன்னணி வரவேற்றுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில தலைவர் த.செல்லக்கண்ணு, பொதுச்செயலாளர் கே.சாமுவேல்ராஜ் ஆகியோர் வெளி யிட்டுள்ள அறிக்கை வருமாறு: கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி வட்டம் சாணமாவு கிராமம் சர்வே எண் 12/2 இல் 0.95.0 ஹெக்டேர் நிலத்தில் ஆதிதிரா விட நலத்துறையால் 41 தலித் குடும்பங் களுக்கு 1999 ஆம் ஆண்டு வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டது. காவேரிப்பட்டினம் - பெங்களூரு பிரதான சாலையில் அமைந்துள்ள மதிப்பு மிக்க இந்நிலத்தை தலித்துகள் பயன்படுத்து வதைத் தடுக்கும் நோக்குடன் சாதியவாதி கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதோடு நிலத்தை அபகரிக்க முறை கேடான முறையில் பத்திரப்பதிவு, அடியாட்களை வைத்து மிரட்டுவது என பல்வேறு விதமான முயற்சிகளை மேற்கொண்டனர். இந்நிலையில் தலித் பயனாளிகளுக்கு நிலத்தை உரிமையாக்கிட தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் தொடர் முயற்சிகளை மேற்கொண்டது. அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்வது, உறுதிமிக்க போராட்டங்கள் நடத்துவது, ஒவ்வொரு போராட்டத்தின் போதும் அதிகாரிகளுடன் நடைபெறுகிற பேச்சுவார்த்தைகளில் எழுத்துப்பூர்வமான ஒப்பந்தங்களும் பெறப்பட்டன. சென்னை உயர்நீதிமன்றத்தில் நில வுரிமை கோரி வழக்கும் தொடரப்பட்டது. இந்நிலையில் சாணமாவு ஆதி திராவிட மக்களின் வீட்டுமனை நிலத்தை உறுதி செய்து உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி யுள்ளது. வழக்கறிஞர் கே.சி.காரல் மார்க்ஸ் இவ்வழக்கை திறம்பட நடத்தினார். இவ்வழக்கை நடத்திய வழக்கறி ஞர் கே.சி.காரல் மார்க்ஸ் அவர்களுக்கும், கிருஷ்ணகிரி மாவட்டக்குழுவிற்கும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்ன ணியின் மாநிலக்குழு வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறது. இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.