states

ஆக்கிரமிப்பாளர்களை ஊக்குவிக்கிறதா அரசு? நீர்நிலை -அரசு இடங்களை ஆக்கிரமிப்பது அதிகாரிகளுக்கு தெரிந்தே நடக்கின்றது

மதுரை, ஜூலை 30- நீர்நிலை மற்றும் அரசு இடங்க ளை ஆக்கிரமிப்பது சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிந்தே நடக்கின் றது. ஆக்கிரமிப்பாளர்களுக்கு மாற்று இடம் வழங்குவதன் மூலம் அரசு ஆக்கி ரமிப்பாளர்களை ஊக்கப்படுத்துகிறது என்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் தெரி வித்துள்ளனர். கன்னியாகுமரியை சேர்ந்த  சுவாமி தாஸ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், “கன்னியாகுமரி மாவட்டம் குளத்தூர் பகுதியில் பறக்கை கால்வாய் செல்கி றது.  இந்த கால்வாய் 16 கிலோமீட்டர் வரை சென்று சுசீந்திரம் கால்வாயுடன் இணைகின்றது.  இந்த கால்வாயில் இரு புறங்களிலும்  பலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இந்த கால்வாய் நாகர் கோவில் மக்களின் பிரதான நீர் ஆதார மாக திகழ்கின்றது. இந்த கால்வாயில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதன் காரண மாக மழை நீர் வடிந்து செல்வதற்கு பிரச்சனையான சூழல் நிலவுகிறது. எனவே இந்த பகுதியில் ஆக்கிரமிப்பு களை  அகற்ற உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த மனு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி மற்றும் ஆனந்தி அமர்வு முன்பு சனிக்கிழமை யன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது தலைமை நீதிபதி, தமிழ கத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டும் அதிகமான ஆக்கிரமிப்பு களை அகற்றாதது ஏன்? என்று கேள்வி எழுப்பினார். ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் சூழல் நிலவுவதாக அரசு தரப்பில் தெரி வித்தனர். இதனை ஏற்க மறுத்த நீதிபதி, தமிழ கத்தில் நீர்நிலை  ஆக்கிரமிப்புகள், அரசு நிலங்கள், புறம்போக்கு ஆக்கிர மிப்பு அதிகரித்துள்ளது. ஆக்கிரமிப்பு களை அகற்றக்கோரி நீதிமன்றம் உத்தர விட்டாலும் சட்ட ஒழுங்கு பிரச்ச னையை  காரணம் காட்டி  ஆக்கிரமிப்பு அகற்றப்படுவதில்லை  சட்ட ஒழுங்கு பிரச்சனை என்றால் அதற்கு உரிய அதிகாரிகளை நியமித்து ஆக்கிரமிப்பு களை அகற்ற வேண்டும். அரசு ,ஆக்கிர மிப்பாளர்களுக்கு மாற்று இடம் வழங்குவதாக கூறி ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் உள்ளதை ஏற்றுக் கொள்ள முடியாது. இது ஆக்கிரமிப்பா ளர்களை ஊக்குவிக்கும் விதமாக அமைகின்றது. நீர்நிலை ஆக்கிரமிப்பு, அரசு இடங்கள் ஆக்கிரமிப்புகள் சம் பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிந்தே நடக்கின்றது. எனவே  இந்த வழக்கில் நீதிமன்றம் உத்தரவிட்ட பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்பை 2  மாதத்தில் அகற்ற வேண்டும். அதன் அறிக்கை யை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.