மதுரை, அக்.28- அரசு உதவி பெறும் பள்ளிகளில் நிர்வாகம் முறையாக நடை பெறவில்லையெனில் அரசு வழங்கிய மானியத்தை திரும்பப் பெற வேண்டுமென சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது. தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த ஆசிரியர் கல்யாணி, சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் கடந்த 2018-ம் ஆண்டு தாக்கல் செய்த மனுவில், தென்காசி மாவட்டம், இலஞ்சி யில் உள்ள உயா்நிலைப் பள்ளியில் 1994-ஆம் ஆண்டில் இருந்து ஆசிரியராகப் பணியாற்றி வரும் தம்மை நிரந்தர ஆசிரி யர் பணியிடத்தில் நியமிக்காமல் வேறொருவரை நியமித்திருப்ப தாகவும், இந்த நியமனத்தை ரத்து செய்து தனக்கு நிரந்தரப் பணி யிடம் வழங்க உத்தரவிட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத் திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஸ்ரீமதி, மனுதாரருக்கு தகுதியில்லை எனக் கூறி, ஊக்கத் தொகை, பதவி உயர்வு வழங்க பள்ளி நிர்வாகம் மறுத்துள்ளது பாரபட்சமானது. மனுதா ரருக்குப் பதிலாக நியமிக்கப்பட்ட முதுநிலை உதவி ஆசிரியரின் நியமனத்தை ரத்துச் செய்து, அந்தப் பணியிடத்தில் மனுதாரரை நியமிக்க வேண்டும் என உத்தரவிட்டார். மேலும் அரசு உதவி பெறும் பள்ளிகள் தனியாக நிர்வாகம் நடத்தக் கூடாது. அரசு உதவி பெறும் பள்ளி, கல்லூரிகளுக்கு அரசு வழங்கும் நிதி சமூக நலனுக்கானது மட்டும்தான். நிர்வாகம் முறை யாக நடைபெறவில்லையெனில், இவற்றுக்கு வழங்கப்பட்ட மானியத்தை அரசு திரும்பப் பெற வேண்டும் என தெரிவித்தார்.