states

கொரோனா பாதிப்பில் இறந்தவர்களின் வாரிசுகள் நிவாரணம் கோரலாம்

விருதுநகர், ஏப்.1- கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் வாரிசு தாரர்கள் உச்சநீதிமன்ற உத்த ரவுப்படி நிவாரணம் கோரலாம் என மாவட்ட ஆட்சியர் ஜெ.மேக நாதரெட்டி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளி யிட்ட செய்திக்குறிப்பில் கூறிய தாவது:  கொரோனா தொற்றால்  பாதிக்கப்பட்டு, இறந்தவர் களின் வாரிசுதாரர்களுக்கு கரு ணைத் தொகை வழங்கிட www. tn.gov.in என்ற இணையதளம் மூலம் மனுக்கள் பெறப்படு கிறது. பின்பு, இறப்பை உறுதி செய்யும் குழுவின் மூலம் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இதுவரை 74097 மனுக்கள் பெறப்பட்டு 55,390 இனங்க ளுக்கு ரூ.50 ஆயிரம் வீதம் நிவா ரணம் வழங்கப்பட்டுள்ளது. 13204 மனுக்கள் இருமுறை வழங்கப்பட்டதால் நிராக ரிக்கப்பட்டது.  இந்நிலையில், உச்சநீதி மன்றம் வழங்கிய தீர்ப்பின்படி, 20.3.2022க்கு முன்பு ஏற்பட்ட கொரோனா இறப்புகளுக்கு நிவாரணம் கோரி வரும் 60 நாட்களுக்குள் (18.5.22) மனுக் களை சமர்ப்பிக்க வேண்டும். மார்ச் 20 முதல் ஏற்பட்ட இறப்பு களுக்கு 90 தினங்களுக்குள் மனுக்களை வழங்க வேண்டும். அம்மனுக்களுக்கு 30 நாட்க ளுக்குள் தீர்வு காண வேண்டும் என கூறப்பட்டுள்ளது.  எனவே, கொரோனா தொற்று காரணமாக இறந்த வர்களின் குடும்பத்தினர் மனுச் செய்து நிவாரணம் பெற்று பய னடையலாம் என அதில் தெரி வித்துள்ளார்.