states

வடமாநிலங்களை முடக்கிய கனமழை மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

போபால், ஜூலை 19- வடமாநிலங்களில் பெய்து வரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் கன மழை மற்றும் வெள்ளப் பாதிப்புகளில் உயிரிழந் தோர் எண்ணிக்கை 105 ஆக உயர்ந்துள்ளது. புனே, கோலாப்பூர், நாசிக் என மொத்தம் 28 மாவட்டங்கள் கனமழை மற்றும் வெள்ளத் தால் பாதிக்கப்பட்டுள்ளன.  இதேபோன்று, குஜராத் மாநிலத்தில் அணைகள் நிரம்பி உபரி நீர் வெளியேற் றப்பட்டு வருகிறது. டாப்பி மாவட்டத்தில் உள்ள உக்கை அணை திறக்கப் பட்டதால் தண்ணீர் ஆர்ப்பரி த்து கொட்டுகிறது. ஒடிசா மாநிலத்திலும் கன மழை பெய்து வருவ தால், கிராகூட் அணை நிரம்பி உபரி நீர் திறக்கப்பட்டுள் ளது. கனமழையால் ஏற் பட்ட வெள்ளம் விளைநிலங் களில் புகுந்ததால் விவ சாயிகள் பெரும் இழப்புக்கு ஆளாகியுள்ளனர்.