கடலூர்,நவ.14- வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இதை யொட்டி கடலூர் மாவட்டம் முழுவதும் திங்கட்கிழமை இரவு முதல் கன மழை பெய்து வருகிறது. கடலூரில் அதிகபட்சமாக 123.6 மில்லி மீட்டர், சிதம்பரத்தில் 102, பரங்கிப்பேட்டை யில் 119.5 மி. மீட்டர் மழை பதிவாகி யுள்ளது. தொடர்ந்து பெய்த மழையால் கடலூரில் பல்வேறு பகுதிகளில் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கி யுள்ளது. கடலூர் மஞ்சக்குப்பம், திருப்பாதிரிப்புலியூர், புதுப்பாளை யம், வண்ணார பாளையம், முதுநகர் உள்ளிட்ட இடங்களில் குடியிருப்பு பகுதி மற்றும் சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. சாலையில் தேங்கிய தண்ணீரால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளானார்கள். தொடர்ந்து, செவ்வாய்க்கிழமை யும் மழை கொட்டித் தீர்த்ததால் கடலூர் மாவட்டம் முழுவதும் பள்ளி கல்லூரிகளுக்கு மாவட்ட நிர்வாகம் விடுமுறை அறிவித்தது. மேயர் ஆய்வு திருப்பாதிரிப்புலியூர் பேருந்து நிலையம் பகுதியில் தேங்கிய மழை நீரை பார்வையிட்ட மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, உடனடியாக ஜேசிபி இயந்திரத்தை கொண்டு வந்து வாய்க்கால் தூர்வாரும் பணியை மேற்கொள்ளச் செய்தார். மாநகராட்சி பகுதிகளில் தேங்கிய தண்ணீரை அப்புறப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், மேலும் கனமழை பெய்தாலும் மாநகராட்சி தயார் நிலையில் உள்ளது என்றும் மேயர் சுந்தரி ராஜா தெரிவித்தார். கடலுக்கு செல்லத் தடை மீன்வளத்துறையின் எச்சரிக்கை யை தொடர்ந்து கடலூர் மாவட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. இதில் ஆயிரத்து க்கும் மேற்பட்ட படகுகள் கடலூர் முதுநகர் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
என்எல்சியில் பணிகள் நிறுத்தம்
ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனமான என்எல்சி இந்தியா நிறு வனத்தில் மூன்று திறந்தவெளி சுரங்கங்களில் இருந்து ஆண்டு ஒன்றுக்கு 2.80 கோடி டன் பழுப்பு நிலக்கரி வெட்டி எடுக்கப்படுகிறது. மேலும், இந்த பழுப்பு நிலக்கரியை பயன்படுத்தி இங்குள்ள நான்கு அனல் மின் நிலையங்கள் மூலம் ஒரு மணி நேரத்திற்கு சுமார் 3,390 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்நிலையில், நெய்வேலி முழு வதும் கனமழை பெய்து வருவதால், சுரங்கங்களில் தண்ணீர் தேங்கி யுள்ளது. இதனால், பழுப்பு நிலக்கரி மற்றும் மேல் மண் வெட்டி எடுக்கும் பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி புதுச்சேரியில் கடலோர மற்றும் கிராமப்புறப் பகுதிகளில் இரண்டு நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பாகூர் ஏரி, ஊசுட்டேரி, கணக்கன் ஏரிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. புதுச்சேரியின் தாழ்வான பகுதி களான ரெயின்போ நகர், கிருஷ்ணா நகர், ஜவஹர் நகர் ஆகிய பகுதி களில் மழைநீர் சாலைகளில் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. அங்குள்ள வீடுகளிலும் மழைநீர் உள்ளே புகுந்தது. புதுச்சேரியின் மையப் பகுதியான இந்திரா காந்தி 100 அடி சாலையில் மழைநீர் தேங்கி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
முதல்வர் ரங்கசாமி
ரெயின்போ நகரில் குடியிருப்பு களில் தேங்கியுள்ள மழை நீரை முதல்வர் ரங்கசாமி, பொதுப்பணித் துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் உடன் நேரில் சென்று பார்வையிட்டார். பின்னர் மழை நீரை அகற்ற அதிகாரி களுக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து முதலியார்பேட்டை, உப்பளம் ஆகிய பகுதிகளுக்கு சென்று மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார். தொடர் மழையால் அன்றாடக் கூலி வேலை செய்து வரும் தொழி லாளர்கள், நடைபாதை வியாபாரிகள், தள்ளுவண்டி தொழிலாளர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். அரசு அலுவல கங்களை தவிர்த்து மற்ற தனியார் அலுவலகங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் வரத்து குறைவாக இருந்தது. அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை விடப் பட்டிருந்த நிலையில் பெரும்பாலான மக்களின் இயல்பு வாழ்க்கை வீட்டிலேயே முடங்கியது.