states

5 மாநிலங்களில் அனல்காற்று

சென்னை,ஏப்.29- தமிழ்நாட்டில்  கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திர வெயில் மே 4 ஆம் தேதி தொடங்கி மே 28 வரை இருக்கும் என்று  ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தற்போது வேலூர், சேலம் உள்பட சில மாவட்டங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி சுட்டெரித்து வருகிறது.  ராஜஸ்தான், தில்லி, ஹரியானா, உத்தரப்பிரதேசம் மற்றும் ஒடிசாவிலும்  5 நாட்களுக்கு அனல் காற்று வீசும்  என்று இந்திய வானிலை மையம் மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. சராசரி வெப்பநிலை 47 டிகிரி செல்சியஸை தாண்டி  பதிவாகும் எனவும் அக்னி வெயில் காலகட்டத்தில் வெயிலின் தாக்கம் மிகவும் அதிகமாக இருக்கும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.