சென்னை, ஜூலை 21- சென்னை நந்தனத்தில் உள்ள ஆவின் பால் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தலை மையில் ஆய்வுக்கூட்டம் வெள்ளிக் கிழமை (ஜூலை 21) நடைபெற்றது. பிறகு செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது:- ஆவின் பால் கொள்முதல் 4 லட்சம் லிட்டர் அதிகரித்து இருக்கிறது. சென்னையில் மட்டும் நாளொன்றுக்கு 50 ஆயிரம் லிட்டர் விற்பனை அதிகரித்துள்ளது. அதேபோல், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதி களில் விற்பனை அதிகரித்து இருக்கி றது. அதுபோல நிர்வாகத்திலும் சில நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தினமும் ஒரு லட்சம் லிட்டர் பால் கேரள மாநிலத்திற்கு கொண்டு செல்லப்படுவதாக கூறப்படும் தகவல் தவறானது. தமிழ்நாட்டில் பாலின் தேவை அதிகமாக உள்ளது. நமக்கு தேவையான பாலை குறைந்த விலை யில் நுகர்வோருக்கு வழங்குவதுதான் நம்முடைய நோக்கம். நம்முடைய தேவைக்கு மிகுதியாக பால் கொள் முதல் செய்யப்படும் பட்சத்தில் வெளி மாநிலங்களுக்கு பால் விற்பனை செய்யப்படும். அதேபோல், பச்சை நிற பால் பாக்கெட் விற்பனையையும் நிறுத்த சொல்லியிருப்பதாக வெளியாகும் தகவல் உண்மை இல்லை. அந்த பாலை சிலர் தவறாக பயன்படுத்து கிறார்கள். அது தொடர்பாக ஆய்வு செய்யத்தான் சொல்லியிருக்கிறோமே தவிர, பச்சை நிற பால் பாக்கெட் விற்பனையை நிறுத்தவில்லை. பால் கொள்முதல் விலையை அதிகரிக்க வேண்டும் என்பது விவசாயி களின் கோரிக்கையாக இருந்து வருகி றது. ஆவின் பால் பாக்கெட் மிகவும் குறைவான விலையில் தான் விற்கி றோம். மற்ற பால் நிறுவனங்களைவிட ரூ.10 முதல் ரூ.15 வரை குறைவாக விற்பனை செய்து வருகிறோம். விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்து முதலமைச்சரிடம் நிச்சயம் கலந்து ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப் படும். ஆவின் தயாரிப்பு பொருட்க ளின் தரம், சுவையை அதிகரிப்பது உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.