states

முதல்வர் இன்று தில்லி பயணம்

சென்னை,ஏப்.26 - கிண்டி பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை திறப்பு விழாவில் கலந்து கொள்வதற்கு, குடியரசுத் தலை வருக்கு அழைப்பு விடுக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் வியாழனன்று  (ஏப்.27) தில்லி செல்கிறார். இது குறித்து தமிழ்நாடு அரசு வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு  “முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 97 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு 2021 ஆம் ஆண்டு வெளியிட்ட அறி விப்பில், “சென்னை கிண்டியில் உள்ள கிங் நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை ஒன்று அமைக்கப்படும்” என்று முதல்வர் அறிவித்தார். அதன்படி, கட்டடம் தரைத்தளம் மற்றும் 6 மேல் தளங்களுடன் சுமார் 51,429 சதுரமீட்டர் பரப்பளவில் மருத்து வமனை கட்டப்பட்டுள்ளது. இம்மருத்து வமனை இதயம் மற்றும் நெஞ்சக அறுவை சிகிச்சைத் துறை, மூளை நரம்பியல் அறுவை சிகிச்சைத் துறை, ரத்தநாள அறுவை சிகிச்சைத் துறை, குடல் மற்றும் இரைப்பை அறுவை சிகிச்சைத் துறை, புற்று நோய் அறுவை சிகிச்சைத் துறை, சிறுநீரக அறுவை சிகிச்சைத் துறை போன்ற உயர் சிறப்புப் பிரிவுகளை கொண்டுள்ளது. இம்மருத்துவமனையின் கட்டு மானப் பணிகள் நிறைவடைந்த நிலை யில், முதல்வர் மு.க.ஸ்டாலின் வியாழ னன்று (ஏப்.27)  இரவு சென்னையி லிருந்து புதுதில்லி புறப்பட்டுச் சென்று, வெள்ளிக்கிழமை (ஏப். 28) குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை சந்தித்து, கிண்டி, கிங் நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிலைய வளா கத்தில் 230 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 1000 படுக்கைகளுடன் கூடிய பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையை திறந்து வைத்திட அழைப்பு விடுக்கிறார். அதிநவீன வசதிகளுடன் கட்டப்பட் டுள்ள இப்பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை தமிழ்நாட்டு மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.