states

சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு சிபிஐ பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை, மார்ச் 31-   சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை  வழக்கில் ஜாமீன் கோரிய காவல் ஆய்வா ளர் ஸ்ரீதர் மனு மீது  சிபிஐ பதிலளிக்குமாறு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தர விட்டுள்ளது. சாத்தான்குளத்தைச் சேர்ந்த வணிகர் களான ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரை விசாரணைக்காக அழைத்துச் சென்ற சாத்தான்குளம் காவல்துறை யினர் கொடூரமாக தாக்கியதில் இறந்தனர்.  இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் ஜாமீன் கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை நீதிபதி இளங்கோவன் முன்பு வெள்ளியன்று நடைபெற்றது.  அப்போது சிபிஐ தரப்பில், மனுதாரர் ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் தாக்கல்  செய்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள் ளது. மனுதாரருக்கு ஜாமீன் வழங்கும் பட்சத்தில் சாட்சியங்களை கலைக்க வாய்ப்பு  உள்ளது. எனவே, ஜாமீன் வழங்கக்கூடாது என கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து நீதிபதி, வழக்கு குறித்து சிபிஐ பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர். மேலும் வழக்கு விசாரணை ஏப்ரல் 10ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

;