ரூ.4 கோடி பறிமுதல் வழக்கு: சிபிசிஐடியிடம் ஆவணங்கள் ஒப்படைப்பு
சென்னை,ஏப்.28- நெல்லை பாஜக வேட்பாளர் நயி னார் நாகேந்திரனின் ஓட்டலில் பணிபுரி பவர்களிடமிருந்து சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு சிபிசிஐடிக்கு மாற் றப்பட்டது.இந் நிலையில் அதற்கான ஆவணங்கள் ஒப்படைக்கப்பட்டன. சென்னை எழும்பூரில் உள்ள சிபி சிஐடி அலுவலகத்தில் சிபிசிஐடி டிஎஸ்பி சசிதரன் முன்னிலையில், விசாரணை அதிகாரியான சிபிசிஐடி காவல் ஆய்வா ளர் லோகநாதனிடம் ஆவணங்களை தாம்பரம் காவல்துறையினர் ஒப்ப டைத்தனர். இந்த வழக்கில் தாம்பரம் காவலர்கள் இதுவரை 15 பேரிடம் விசாரணை நடத்தி, 350 பக்க விசாரணை அறிக்கையை தயார் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக் கது. 350 பக்க விசாரணை அறிக்கையை தாம்பரம் காவல் ஆய்வாளர் பால முரளி சுந்தரம், சிபிசிஐடி போலீசாரி டம் ஒப்படைத்தனர். கைது செய்யப் பட்டவர்களின் 4 செல்போன்களும் சிபிசிஐடியிடம் ஒப்படைக்கப்பட்டுள் ளது.
தமிழ்நாட்டில் வெப்ப அலை எச்சரிக்கை
சென்னை,ஏப்.28- தமிழ்நாட்டில் மூன்று நாட்களுக்கு வெப்ப அலை வீசும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ஏப்ரல் 29 ஆம் தேதி முதல் மே 1 ஆம் தேதி வரை, தமிழக உள் மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக உயரக் கூடும். வட தமிழக உள் மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை 3 முதல் 5 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிக மாக இருக்கக்கூடும். அதிகபட்ச வெப்ப நிலை வட தமிழக உள் மாவட்டங்களின் ஒருசில இடங்களில் 39 டிகிரி முதல் 42 டிகிரி செல்சியஸும், இதர தமிழக மாவட் டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 35 டிகிரி முதல் 39 டிகிரி செல்சியஸ் இருக்கக்கூடும். ஏப்.29 முதல் மே 1 வரை, அடுத்த 3 நாட்களுக்கு வட தமிழக உள் மாவட் டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும். இதர தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிக வெப்ப நிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக் கும்போது ஓரிரு இடங்களில் அசவுகரி யம் ஏற்படலாம் என்று தெரிவித்துள் ளது.
தமிழ்நாட்டை வஞ்சிக்கும் மோடி அரசு: சிபிஐ கண்டனம்
சென்னை,ஏப்.28- வெள்ள நிவாரண நிதி வழங்குவதில் தமிழ்நாட்டை வஞ்சிக்கும் ஒன்றிய பாஜக அரசுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்ட னம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அக் கட்சியின் மாநிலச் செயலா ளர் இரா. முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசு கடந்த பத்தாண்டுகளாக தமிழ் நாட்டை யும், மக்களையும் வஞ்சித்து வருகிறது. ஒன்றிய அரசும், மாநில அரசும் இணைந்து செயல் படுத்தும் திட்டங்களுக்கு நிதி ஒதுக்காமல் இழுத்தடிக்கிறது. அவசர காலத் தேவைக்கு மாநில அரசு கடன் வாங்க அனுமதி மறுத்து வருகிறது. தமிழ்நாட்டை தொடர்ந்து வஞ்சித்து வரும் ஒன்றிய பாஜக அரசு, இயற்கை பேரிடர் தாக்கு தலால் பேரிழப்பால் மக்களின் இயல்பு வாழ்க்கை நிலைகுலைந்த நேரத்தில் கரம் நீட்டி உதவாமல் உதாசீனப்படுத்தி, அவதூறு களை பரப்பி அரசியல் ஆதாயம் தேடும் மலிவான செலவில் ஈடுபட்டதை தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் மறந்து விட மாட்டார்கள். மிக் ஜாம் புயலும், பெருமழையும் தாக்கு தல் நடத்தியது. இந்த இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்டு, பாதுகாத்து, மறுவாழ்வுக்கு உதவும் வகையில் தமிழ்நாடு அரசு ரூ. 2,477 கோடி செலவு செய்து விட்ட நிலையில், மோடியின் ஒன்றிய அரசு இரக்கம் காட்ட முன் வரவில்லை. இந்த நிலையில் தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டது. உச்ச நீதிமன்றம் தலையிடும் சூழலிலும் ஒன்றிய அரசு மிக, மிகக்குறைவான தொகைக்கு அனுமதி வழங்கியிருக்கிறது, தமிழ்நாட்டையும், மக்க ளையும் அவமதிக்கும் செயலாகும். ஒன்றிய பாஜக அரசின் பாரபட்சம், பழிவாங்கும் செயலை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மை யாகக் கண்டிப்பதுடன், தமிழ்நாடு அரசு கோரியுள்ள ரூ.37 ஆயிரத்து 907 கோடியை உடனடியாக ஒதுக்கீடு செய்ய வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
24 தமிழக மீனவர்கள் விடுவிப்பு
சென்னை, ஏப்.28- இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ் வரத்தைச் சேர்ந்த 24 மீனவர்களை, கடந்த மார்ச் 24 ஆம் தேதி இலங்கை கடற்படை யினர் கைது செய்து, சிறையில் அடைத்த னர். மீனவர்களை விடுதலை செய்ய நட வடிக்கை எடுக்க வேண்டும் என வலி யுறுத்தி, முதல்வர் ஸ்டாலின், ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு கடி தம் எழுதினார். இதையடுத்து இந்திய தூதரக அதி காரிகள், இலங்கை அரசிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். கடந்த 4 ஆம் தேதி இலங்கை நீதிமன்றம் 24 பேரையும் விடு தலை செய்து, தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைத்தது. அவர்கள் கொழும்புவில் இருந்து விமானத்தில் சென்னைக்கு அனுப்பப்பட்டனர். சென்னை விமான நிலையத்தில் மீன வர்களை தமிழக மீன்வளத் துறை அதி காரிகள் வரவேற்று, தனி வாகனங்கள் மூலம் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தனர்.
மே 9 விஜயகாந்திற்கு பத்ம பூஷண் விருது
சென்னை,ஏப்.28- தேமுதிக பொதுச்செயலாளர் பிரேம லதா விஜயகாந்த் சென்னையில் செய்தி யாளர்களிடம் கூறுகையில், “வருகிற 9 ஆம் தேதி விஜயகாந்திற்கு பத்ம பூஷண் விருது வழங்கப்படுகிறது. இந்த விருதை பெற்றுக் கொள்ள உள்துறை அமைச்ச கத்தில் இருந்து அழைப்பு வந்துள்ளது” என்று தெரிவித்தார்.
4 நாட்கள் கொடைக்கானலில் தங்கும் முதல்வர்
சென்னை, ஏப்.28- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது குடும்பத்துடன் ஏப்ரல் 29 அன்று கொடைக்கானல் செல்கிறார். சென்னை யில் இருந்து மதுரைக்கு விமானம் மூலம் செல்கிறார். பின்னர் மதுரையில் இருந்து காரில் அவர் புறப்பட்டு கொடைக்கான லுக்கு செல்கிறார். மே 4 ஆம் தேதி வரை அவர் அங்கு தங்கி இருப்பார் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி ஏப்ரல் 29 முதல் வருகிற மே 4ஆம் தேதி வரை கொடைக்கானலில் டிரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கொடைக்கானல் பகுதிகளில் டிரோன் கள் மற்றும் பலூன்கள் பறக்க தடை விதித்து திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்.