சென்னை,ஜூன் 15- தமிழ்நாட்டில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு துணைத் தேர்வு எழுதும் மாணவர்கள் ஜூன் 20 முதல் நுழைவு சீட்டு (ஹால் டிக்கெட்) பெற்றுக்கொள்ளலாம் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்க ளில் 10 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் நடந்து முடிந்தது. இதைத் தொடர்ந்து கடந்த மே மாதம் முடிவுகள் வெளியிடப் பட்டது. இதில் தோல்வி யடைந்த மாணவர்களுக்கு துணைத் தேர்வு நடத்தப்ப டும் என அரசு அறிவித்தது. இதன்படி தேர்வில் தோல்வியடைந்த மாண வர்கள் மற்றும் தேர்வுக்கு வருகை தராத மாணவர்கள் ஆகியோரை கண்டறிந்து, அவர்களுக்கு அந்ததந்த பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டன. இந்த நிலையில் துணைத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் தொடர்பான அறிவிப்பை தேர்வுத்துறை வெளியிட்டுள்ளது. அதன் படி 10 மற்றும் 12 ஆம் வகுப்பு துணைத் தேர்வு ஹால் டிக்கெட்டை வரும் 20 ஆம் தேதி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.