மீண்டும் ரூ.1.40 லட்சம் கோடியை தாண்டிய ஜிஎஸ்டி வசூல்!
மே மாதத்தில் ஜிஎஸ்டி வருவாயாக ரூ. 1 லட்சத்து 40 ஆயிரத்து 885 கோடி வசூலாகியுள்ளது. முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ஜிஎஸ்டி வரி வசூல் ரூ. 97 ஆயிரத்து 821 கோடி யாக இருந்த நிலையில் தற்போது 44 சதவிகிதம் அதிகரித்துள்ளது. மேலும், ஜிஎஸ்டி அமலாக்கம் செய்யப்பட்டத்தில் இருந்து 4-ஆவது முறையாக மாதாந்திர ஜிஎஸ்டி வசூல் 1.40 லட்சம் கோடி ரூபாயைத் தாண்டியுள்ளது. மேலும், 2022 மார்ச் முதல் தொடர்ச்சியாக 3-ஆவது மாதமாக ஜிஎஸ்டி வரி வசூல் அதிகரித்துள்ளது. 2022 மே மாதத்தில், இறக்குமதி பொருட்களின் மீதான வருவாய் 43 சதவிகிதம் அதிகரித்துள்ளது.
நேஷனல் ஹெரால்டு வழக்கு: சோனியா, ராகுலுக்கு சம்மன்
நேஷனல் ஹெரால்டு நிறுவனத்தை ‘யங் இந்தியா அசோசியேட்’ நிறுவனத்திற்கு மாற்றி யதில் முறைகேடு நடந்ததாக பாஜக எம்.பி. சுப்பிரமணியசாமி வழக்கு தொடர்ந்தார். அதன்பேரில், சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி மீது அமலாக்கத்துறை சட்டவிரோத பண பரி வர்த்தனை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில் ஏற்கெனவே காங்கிரஸ் தலை வர்கள் பவன்குமார் பன்சால் உள்ளிட்டோரை விசாரித்த நிலையில், தற்போது காங்கிரஸ் தலை வர்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோரை விசரணைக்கு ஆஜராகுமாறு அம லாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது.
பாடகர் கேகே சந்தேக மரணம் என போலீசார் வழக்கு!
கேரளாவைச் சேர்ந்த பிரபல பின்னணி பாடகர் கிருஷ்ணகுமார் குன்னத். தமிழ், இந்தி உள் ளிட்ட பல்வேறு மொழிகளில் பாடியுள்ளார். இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் மூலம் தமிழ்த் திரைப்படங்களில் அறிமுகமான இவர் மன்மதன், கில்லி, செல்லமே, 7ஜி ரெயின்போ காலனி, காக்க காக்க, மின்சாரக் கனவு உள்ளிட்ட படங்களில் 66 பாடல்களை தமிழில் பாடி ரசிகர்களை கவர்ந்துள்ளார். இதனிடையே, கொல்கத்தாவிலுள்ள ஹோட்டல் அறையில் மயங்கி விழுந்ததாக கூறி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். முன்ன தாக அவரது தலை, முகம், உதடுகளில் காயம் காணப்பட்டதால், இதனை சந்தேக மரணம் என்று போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
பிரதமர் காப்பீட்டுத் திட்டங்களின் பிரீமியம் உயர்வு!
ரூ. 2 லட்சம் அளவிற்கு காப்பீடு வழங்கம் பிரதமரின் விபத்துக் காப்பீட்டு திட்டம், பிரதமரின் ஆயுள் காப்பீட்டு திட்டம் ஆகியவை கடந்த 2015-ஆம் ஆண்டில் இருந்து செயல்படுத்தப்படு கின்றன. இந்நிலையில், இந்த காப்பீட்டுத் திட்டங்களுக்கான பிரீமியம் தற்போது உயர்த்தப்பட்டுள் ளது. பிரதமரின் விபத்துக் காப்பீட்டுத் திட்ட பிரீமியம் ரூ.330 என்பதிலிருந்து ரூ.436 ஆகவும் பிரத மரின் ஆயுள் காப்பீட்டு திட்ட பிரீமியம் ரூ.12-லிருந்து ரூ.30 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளன.
ராஜபக்சேவை இந்தியாவுக்கு அழைக்கும் சுப்பிரமணியசாமி
இலங்கையில் பொதுமக்களின் எதிர்ப்புக்கு அஞ்சி தப்பி, அந்நாட்டின் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே, வெளியுலகிற்கே வராமல் பதுங்கிக் கிடக்கிறார். இந்நிலையில் பாஜக எம்.பி. சுப்பிர மணியசாமி டுவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “என்னுடைய நண்பரும் இலங்கை தலைவருமான மகிந்த ராஜபக்சே-வை இந்தியாவுக்கு அழைக்க முடிவு செய்துள்ளேன். தில்லியில் பொது நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றவும் இந்து மற்றும் பவுத்த கோவில்களை பார்வையிடவும் ஏற்பாடு செய்துள்ளேன். பருவமழைக்கு முன்னதாக மகிந்த ராஜபக்சே இந்தியா வருகை தருவார் என எதிர்பார்க்கிறேன்” என சுப்பிரமணியசாமி குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் நிதிப்பற்றாக்குறை ரூ.15.86 லட்சம் கோடி!
2021-22 நிதியாண்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நிதிப் பற்றாக்குறையின் அளவு 6.71 சத விகிதம் என கணக்கிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. இது, நிதி அமைச்சகம் பட்ஜெட் மறுமதிப்பீட்டில் நிர்ணயித்திருந்த 6.9 சதவிகிதத்தைக் காட்டிலும் குறைவான அளவே ஆகும். பொதுக் கணக்கு கட்டுப்பாட்டாளா் தெரிவித்துள்ளபடி, நிதிப் பற்றாக்குறையானது கடந்த நிதி யாண்டில் ரூ. 15 லட்சத்து 86 ஆயிரத்து 537 கோடியாக உள்ளது.
வர்த்தக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைப்பு!
வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் மற்றும் வர்த்தக பயன் பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் மற்றும் வாகனங்களுக்கான சிஎன்ஜி எரிவாயு சிலிண்டர் ஆகியவற்றின் விலையை ஒன்றிய அரசு தொடர்ந்து உயர்த்தி வந்தது. இதனிடையே, கடந்தவாரம் பெட்ரோல், டீசலுக்கான கலால் வரியை ஒன்றிய அரசு குறைத்த பின்னணியில், தற்போது வர்த்தக பயன்பாட்டிற்கான 19 கிலோ எடைகொண்ட சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் ரூ.134 குறைக்கப்பட்டுள்ளது.
தற்பாலின இணையர் சேர்ந்து வாழ அனுமதி!
தற்பாலின சேர்க்கை குற்றமல்ல என்றும், கேரளத்தைச் சேர்ந்த ஆதிலா நஸ்ரின், பாத்திமா நூரா ஆகிய தன்பாலின இணையர்கள் சேர்ந்து வாழத் தடையில்லை என்றும் நீதிபதிகள் கே. வினோத் சந்திரன், சி. ஜெயச்சந்திரன் அடங்கிய கேரள உயர் நீதிமன்ற அமர்வு தீர்ப்பு வழங்கி யுள்ளது. சவூதி அரேபியாவில் மாணவிகளாக இருந்தபோது காதலிக்கத் துவங்கிய ஆதிலா நஸ்ரினும், பாத்திமா நூராவும் படிப்பை முடித்தும் சேர்ந்துவாழ முடிவு செய்தனர். இந்நிலையில், பாத்திமா நூரா-வை அவரது குடும்பத்தினர் பிரித்துச் சென்ற நிலையில், ஆதிலா நஸ்ரின் ‘ஹேபி யஸ் கார்பஸ்’ வழக்கு தாக்கல் செய்தார். அதனை ஏற்றுக்கொண்டு இரண்டு பெண்கள் சேர்ந்து வாழ தடையில்லை என்று கேரள உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
ஒரே நேர்கோட்டில் தோன்றும் 5 கோள்கள்!
ஜூன் மாதம் முழுவதும், சூரியன் உதயத்திற்கு சுமார் 45 நிமிடங்களுக்கு முன், புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி ஆகிய ஐந்து கோள்களும் ஒரே நேர்கோட்டில் காட்சியளிக்க உள்ளன. இந்த அரிய நிகழ்வை நம்மால் வெறும் கண்களால் காண முடியும் என அறிவியலா ளர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த ஏப்ரல் மாதத்தில் நான்கு கோள்கள் ஒரே நேர்கோட்டில் தோன்றிய நிலையில், தற்போது, ஜூன் மாதத்தில் புதன் கோளும் இந்த அணிவகுப்பில் சேர்ந்துள்ளது. 2022-க்குப் பிறகு, 2040-ஆம் ஆண்டில்தான் இந்த அரிய நிகழ்வை காணமுடியும்.