states

சிதம்பரம் நடராஜர் கோவிலில் விதிமீறல் நடக்கும் போது அரசு தலையிடும்

சென்னை,ஜூலை 1- சிதம்பரம் நடராஜர் கோவிலில் விதிமீறல் நடக் கும் போது அரசு தலை யிடும் என்று அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரி வித்தார். இந்து சமய அறநிலை யத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலைமையில் ஆணையர் அலுவலகத்தில் துறையின் செயல்பாடுகள், சட்டமன்ற அறிவிப்புகள் பணி முன்னேற்றம் குறித்து  சீராய்வு கூட்டம் நடைபெற்றது. பின்னர் அமைச்சர் பி.கே.  சேகர்பாபு செய்தியாளர் களிடம் கூறியதாவது:- இந்து சமய அறநிலை யத்துறை வரலாற்றில் இது வரை இல்லாத அளவிற்கு 2 ஆண்டுகளில் 812 கோவில் களில் குடமுழுக்குகள் நடை பெற்றுள்ளது, ரூ.4,754 கோடி மதிப்பீட்டிலான 5,060 ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்டுள்ளன. சிதம்பரம் கோவிலை பொறுத்தவரை தீட்சிதர்கள் தாக்குதல் நடத்தியது அத்து மீறல் இல்லையா? கொரோனா காலத்திற்கு பின்பும் கனக சபை மீதேறி  தரிசனம் செய்ய அனுமதி மறுத்த நிலையில் உயர்நீதி மன்றம் இந்து சமய அறநிலையத்துறை உரிய  நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தும் நிலையிலே அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

பின்னரும் கனசபை மீதேறி தரிசனம் செய்ய  அனுமதி மறுக்கப்பட்டது அத்துமீறல் இல்லையா? இந்து சமய அறநிலை யத்துறை சட்டப்படி தான்  அனைத்து நடவடிக்கை களையும் மேற்கொண்டு வருகிறது. எதிலும் சட்ட மீறல்  இல்லை. அது தீட்சிதர்களி டம் தான் உள்ளது. சிதம்பரம் நடராஜர் திருக்கோயில் விஷயத்தில் எந்த விளைவுகளையும் சந்திக்க அரசு தயங்காது, எங்கள் இயக்கமும் தயங் காது. பக்தர்கள் அடிப்படை  உரிமைகள் மறுக்கப்படும் போது, விதிமீறல்கள் நடக்கும்போதும் தான் இந்து சமய அறநிலையத்துறை தலையிடுகிறது. சிதம்பரம் கோயில் தீட்சி தர்களிடம் துறை ஒப்படைக் கும் போது வைப்பு நிதியாக  ரூ.3.5 கோடியாக இருந்தது. தற்போது எவ்வளவு நிதி உள்ளது என்பதை கூற தீட்சிதர்கள் மறுக்கிறார்கள். கோவிலுக்கு சொந்த மான நிலங்கள் மூலம் கிடைக் கும் வருவாயை வசூலிக்க தனி வட்டாட்சியர் நியமிக்கப் பட்டுள்ளார். தற்போது ரூ.6.36 லட்சம் வருவாய் வசூல் செய்யப்பட்டுள்ளது. மேலும், கட்டளைகள் மற்றும்  திருவிழாக்கள் போன்ற நிகழ்ச்சிகளுக்கு எழுதி வைத்து இருக்கின்ற இடங்க ளில் இருந்து வருகின்ற வருமானங்களும் கோவி லுக்கு செலுத்தப்படு கின்றன. இந்த வருவா யில் இருந்து தான் அந்த  கோயிலின் மின்சார  கட்டணம் செலுத்தப்படு கிறது.

சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்கள் பணிகள், நடவடிக்கைகள் நியாயப்படி செல்லுகின்ற போது அதில் இந்து சமய  அறநிலையத்துறை தலையிடுவதற்கு ஒன்றுமே இல்லை. அவர்களின் செயல்கள், பணிகள் அனைத்தும் அத்து மீறுகின்ற போதும், அடா வடித்தனங்கள் நிகழ்கின்ற போதும், பக்தர்களை துன்புறுத்துகின்ற போதும் நாங்கள் தலை யிட வேண்டிய கட்டாயத் தில் இருக்கிறோம். இந்த நிலை தொடர்ந்தால் திருக்கோயிலை துறை  மீட்பது குறித்து பரிசீலிக்கப் படும். இந்து சமய அறநிலை யத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் திருப் பணிகளை மேற்கொண்டு குட முழுக்குகளை நடத்த மாதந்தோறும் இருமுறை மாநில அளவிலான வல்லுநர் குழு கூடி அனுமதி  வழங்கி வருகிறது. அப்படி  வழங்கப்பட்ட அனுமதி களின் அடிப்படையில் பணிகளை துரிதப்படுத்து வதற்கு மாதந்தோறும் சீராய்வு கூட்டங்கள் நடத்தப் படுகின்றன. திருச்செந்தூர் கோவில்  எச்.சி.எல் நிறுவனத்தின் மூலம் ரூ.200 கோடி மதிப்பீட்டில் மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வரு கின்றன. திருக்கோயில் நிதி ரூ.100 கோடியில் பணிகளை மேற்கொள்ள அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அப்பணிகள் விரைவில் தொடங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.