சென்னை, ஜன.9- சட்டப்பேரவையில் ஆளுநர் உரை யாற்ற எதிர்ப்பு தெரிவித்து வெளி நடப்பு செய்த சட்டமன்றக் கட்சித் தலை வர்கள் பேரவை வளாகத்தில் செய்தி யாளர்களிடம் கூறியது வருமாறு:- செல்வப்பெருந்தகை (காங்): அரசியல் அமைப்பு சட்டத்திற்கு பாது காப்பு கொடுக்க வேண்டிய ஆளுநரே அதனை சிதைத்து வருகிறார். அது மட்டுமல்ல, தமிழ்நாட்டின் கலாச்சாரம், பண்பாட்டை, வரலாற்றை திரித்து வருகிறார். அரசின் உரையை முழுமை யாக படிக்க வேண்டிய ஆளுநர், அதன் மரபுகளை மீறியதுடன் சர்வாதிகாரத்து டன் நடந்து கொள்கிறார். ஜனநாயக படுகொலை செய்கிறார். இதையெல் லாம் தமிழக மக்கள் வேடிக்கை பார்த் துக்கொண்டிருக்க மாட்டார்கள். நாகை மாலி (சிபிஎம்): தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் ரவி உரை யாற்றுவதற்கு எந்த வகையிலும் தகுதி யற்றவர். எனவே தான் நாங்கள் அனை வரும் ஆளுநர் உரையை புறக்கணித்து வெளிநடப்பு செய்திருக்கிறோம். ஆளு நர் என்பவர் மாநில அரசின் செயல்பாடு களுக்கு துணை நிற்பவராக இருக்க வேண்டும். மாநில அரசு கொண்டு வரும் சட்ட மசோதாக்களை ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைக்கும் ஒரு முகவராகதான் செயல்பட வேண்டும். ஆனால், தமிழ் நாட்டிலுள்ள ஆளுநர் ரவி, ஆர்எஸ்எஸ் - பாஜக ஊழியராக செயல்படுகிறார்
திமுக அரசுக்கு எதிராகவும், தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு எதிராகவும் செயல்படுவதால் ஆளுநர் ரவி தமிழ்நாட்டிற்கு தேவையற்றவர் மட்டு மல்ல; ஒட்டுமொத்த மக்களாலும் புறக்க ணிப்படுகிற ஆளுநராகவும் செயல் பட்டுக் கொண்டிருக்கிறார். மாநில அரசு இயற்றும் சட்டங்களை ஒன்றிய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்காமல் கிடப்பில் போட்டு தமிழ்நாட்டு அரசை செயல்படவிடாமல் தடுக்கிறார். மக்களுக்கு எதிரான, சமூக நீதிக்கு எதிரான ஓர் ஆளுநர் தமிழ்நாட்டில் இருக் கக்கூடாது. அவரை ஒன்றிய பாஜக அரசு திரும்பப் பெற்றுக்கொள்ள வேண்டும். எனவே, தமிழக மக்கள் மற்றும் சட்ட மன்ற உறுப்பினர்களின் உணர்வுகளை முழுமையாக புரிந்து கொண்டு ஆளுநர் ரவியை ஒன்றிய அரசு உடனடியாக திரும்பப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
சிந்தனைச்செல்வன்(விசிக): ஆளு நர் உரை என்பது ஆளும் அரசின் கொள் கைப் பிரகடனம். எனவே, அதை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால், ஆளுநர் முழுக்க பாஜக, சங் பரிவார் கூட்டங்க ளின் கருத்தையும், அஜெண்டாவையும் நிறைவேற்றும் பணியை செய்து வரு கிறார். சட்டமேதை அம்பேத்கரின் பெய ரைக்கூட சொல்லாமல் இழிப்படுத்தும் ஆளுநர் ரவி தமிழ்நாட்டின் ஆளுநராக ஒரு நிமிடம் கூட நீடிக்கக்கூடாது. ராமச்சந்திரன்(சிபிஐ): சமூக நீதியின் ஆணிவேராக திகழ்ந்துகொண்டிருக்கும் சட்டப்பேரவையின் மரபுகளை மீறிய ஆளுநர் ரவி, ஆளுநர் மாளிகையை ஆர்எஸ்எஸ் அலுவலகமாக மாற்றி வருவதால் தமிழ்நாட்டிற்கு தேவை யில்லை. ஒன்றிய பாஜக அரசு உடனடி யாக அவரை திரும்பப்பெற வேண்டும். ஜவாஹிருல்லா (மமக): பாஜகவின் முழுநேர அரசியல்வாதியாக செயல்படும் ஆளுநர் ரவி, தமிழக மக்களுக்கும், அர சுக்கும் இடையூறு ஏற்படுத்தி கொண்டு ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தை புகுத்தி வரு வதால் அவரை ஒன்றிய அரசு திரும்பப் பெறும் வரை எங்கள் போராட்டம் தொட ரும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.