சென்னை, ஜூன் 10- வேலைவாய்ப்பில் மாற்றுத்திறனாளிக ளுக்கு 4 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கப் படும் என தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. வேலைவாய்ப்பில் மாற்றுத்திறனாளிக ளுக்கான 4 விழுக்காடு இடஒதுக்கீட்டை உறுதி செய்ய 9 பேர் கொண்ட குழு அமைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட் டுள்ளது. அந்த அரசாணையில், “அரசுப் பணிகளில் மாற்றுத்திறனா ளிகளுக்கு 4 விழுக்காடு இட ஒதுக்கீட்டின் அடிப்படையில், வேலை வாய்ப்பு வழங்குவதை உறுதி செய்திடும் வகையில் உயர்மட்டக் குழு அமைக்கப் பட்டுள்ளது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. கண்துடைப்பாக மாறக்கூடாது! அரசு வெளியிட்டிருக்கும் அரசாணை குறித்து தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுக்காப் போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் எஸ். நம்புராஜன் கூறுகை யில்,“அரசு துறை பணிகளில் மாற்றுத் திறனா ளிகளுக்கான இட ஒதுக்கீடு கண்காணிக்க அதிகாரிகளை மட்டுமே கொண்டு 2008 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட உயர் மட்டக்குழு அரசாணை இது” என்றார். 14 ஆண்டுகளில் ஒரு முறைக்கூட இக்குழு கூடவில்லை. எனவே, இப்போது வந்துள்ள அரசாணையும் கன் துடைப்பாக அமை யாமல் இருப்பதற்கு முன்னணி சங்க பிரதிநிதி களையும் இக்குழுவில் இணைப்பது அவசிய தேவையாகும். எனவே, முதல்வரும், அரசும் கவனிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.