சென்னை,நவ.19- கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 7 ஆம் தேதி முதல் தொடர்ந்து வேலை நிறுத்தம், காத்திருப்பு போராட்டங்களில் ஈடுபட்டு வரும் அரசு ரப்பர் கழக தொழிலாளர்க ளுக்கு கூலி உயர்வு ஒப்பந்தத்தை அமல்படுத்த முதலமைச்சர் தலையிட வேண்டும் என்று சிஐடியு கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து சிஐடியு மாநில பொதுச் செயலாளர் ஜி.சுகுமாறன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:- கன்னியாகுமரி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசின் வனத்துறையின் கீழ் ரப்பர் கழகம் செயல்படுகிறது. இதில் நூற்றுக்கணக்கான தொழி லாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களின் ஊதிய ஒப்பந்த காலம் 2018ஆம் ஆண்டுடன் முடிந்து விட்டது. 2019-20 ஆம் ஆண்டிற்கான ஊதிய உயர்வு குறித்து நிர்வாகம் மற்றும் தொழிலாளர் துறையிடம் அளித்த னர். அதன் மீது 31.12.2021 அன்று தமிழக தகவல் தொடர்புத்துறை அமைச்சர் முன்னிலையில் பேச்சு வார்த்தை நடந்தது. தொழிற்சங்கமும் நிர்வாகமும் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில் நாளொன்றுக்கு ரூ.40 உயர்வு என்று உடன்பாடு ஏற்பட்டது. ஆனால், அரசு ரப்பர் கழக நிர்வாகம் புதிய ஊதிய உயர்வை அமலாக்க மறுத்து வருகிறது.
இதனால், அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பாக தொடர் இயக்கம் நடந்து வருகிறது. இந்த பின்னணியில் 16.8.2022 அன்று சென்னையில் தொழிலாளர் துறை ஆணையர் அலுவலகத்தில் தமிழக அரசின் தொழிலாளர், தகவல் தொடர்பு, வனத்துறை அமைச்சர்கள் முன்னி லையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதன் அடிப்படையில், 12(3) ஒப்பந்தத்தை ஏற்படுத்த பரிந்துரை செய்யப்பட்டது. ஆனால், இது வரைக்கும் அரசு ரப்பர் கழக நிர்வாகம் அமைச்சர்கள் வழங்கிய உறுதி மொழியை அமலாக்காமல் அதனை மீறும் வகையில் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அமைச்சர்களின் ஆலோ சனையை அரசு ரப்பர் கழக நிர்வா கம் மதிக்காதது தொழிலாளர்க ளிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தொழிற்சங் கங்கள் எவ்வளவு முயன்றும் வேறு வழியின்றி தொழிலாளர்கள் தங்க ளது உரிமைக்காக இம் மாதம் 7 ஆம் தேதியிலிருந்து வேலை நிறுத்தம் மற்றும் காத்திருப்பு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்ற னர். எனவே, முதலமைச்சர் உடனடி யாக தலையிட்டு அமைச்சர்கள் முன்மொழிந்த பரிந்துரைகளை ரப்பர் கழக நிர்வாகம் ஏற்று தொழி லாளர்களின் நலன்களை பாதுகாக்க வேண்டுகிறோம். இவ்வாறு சுகுமாறன் தெரிவித் திருக்கிறார்.