தனியார் வன பாதுகாப்புச் சட்டத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய வெங்கட கிருஷ்ணன் கமிட்டியை உச்சநீதிமன்றம் நியமித்தது. 2002 இல் இந்த கமிட்டி குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்தது. அவர்களிடம் பெண்கள் கதறி அழுதனர். அந்த கமிட்டி விவசாய நிலங்கள், குடியிருப்பு பகுதிகளுக்கு சட்டத்திலிருந்து விலக்கு அளிக்க பரிந்துரை செய்தது. மாவட்ட ஆட்சி யராக இருந்த ராஜேந்திர ரத்னுவும் இதுபோன்ற ஒரு பரிந்துரையை அரசுக்கு அனுப்பினார். அதன்பிறகு ஐஎப்எஸ் அதிகாரி வினோத்ராய் தலைமையி லான 5 பேர் கொண்ட குழு தமிழக அரசால் அமைக்கப்பட்டு அறிக்கை பெறப்பட்டது. அதன் அடிப்படையில் உச்சநீதிமன்றத்தில் மாவட்ட ஆட்சியர் ஒரு இடைக்கால மனு தாக்கல் செய்தார். ஆனாலும், வனத்துறையினரின் பிடிவாதம் காரணமாக ஏழை மக்களின் துயரங்கள் நீடிக்கின்றன.