சென்னை, ஜூலை 28- கொரோனா பேரிடர் காலத்தில் பணியாற்றிய மருத்துவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு மதிமுக பொதுச் செய லாளர் வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட் டுள்ள அறிக்கையில், ‘“கொரோனா பேரிடர் காலத்தில் தமிழ்நாட்டில் பாதிக்கப்பட்ட லட்சக்கணக்கான நோய்த் தொற்றாளர்ளுக்கு, உயிரை துச்சமென கருதி ஆயிரக் கணக்கான மருத்துவர்கள் மருத்துவம் பார்த்தனர். தெருவுக்கு தெரு ஆயிரம் ஆயிரம் என நோய்த் தொற்றாளர் களின் எண்ணிக்கை மணிக்கொரு முறை பல்கிப் பெருகியது. இந்த நேரத்தில், மருத்துவக் கல்லூரி களில் மருத்துவம் பயின்று முடித்த நிலையில் இருந்த அனைவரும் சிகிச்சை அளிக்க முன் வரலாம் என முந்தைய தமிழ்நாடு அரசு அறிவிப்பு செய்தது.
இந்த அறிவிப்பை ஏற்று, மருத்து வப் பணியாற்றிட வந்த நூற்றுக் கணக்கான மருத்துவர்கள் பெருந் தொற்றால் பாதிக்கப்பட்டு, உயி ருக்கு ஆபத்தான நிலைக்குச் சென்றனர் என்பது குறிப்பிடத் தக்கது. இந்த தொற்று காலத்தில் மருத்துவர்கள் குறைந்தபட்சம் நூறு நாட்கள் பணியாற்றினாலே, நிரந்தர பணி வாய்ப்பு வழங்கலாம் என ஒன்றிய அரசின் மருத்துவத் துறை 2021 - ஆம் ஆண்டு மே 3 ஆம் தேதி வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகள் குறிப்பிட்டிருந்தது. ஆனால், கடந்த ஆட்சியில் இந்த மருத்துவர்களுக்கு உரிய பணி பாதுகாப்பு வழங்காமல் தற்காலிக மாக பணி வழங்கியதால், ஆயிரக் கணக்கான மருத்துவர்கள் வேலை இழந்துள்ளனர். தமிழ்நாடு அரசின் மருத்துவப் பணியாளர் தேர்வா ணையம் அரசு மருத்துவர்களை சேர்ப்பதற்கு ஏப்ரலில் தேர்வு நடத்தி முடித்துள்ளது. இந்தத் தேர்வில் தமிழ் மொழி தகுதித் தேர்வு கட்டாயம் என்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்த ஆணையால், தமிழ்நாடு மருத்துவர்கள் அரசுப் பணிகளில் சேர்வதற்கு வாசல் திறந்து வைக்கப்பட்டுள்ளது. அதேபோல், கொரோனா பேரி டர் காலத்தில் பணியாற்றி, தற்போது பணி வாய்ப்பு இல்லாமல், தேர்வு எழுதி முடிவுக்காக காத்திருக்கும் ஆயிரக்கணக்கான மருத்துவர்க ளுக்கு, சிறப்பு மதிப்பெண்கள் வழங்கி, அரசு பணி வாய்ப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்திருக்கிறார்.