அரசு உத்தரவாதம் ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ்
சென்னை, அக்.6- சம வேலைக்கு சம ஊதியம் வழங்க கோரி இடைநிலை ஆசிரியர்கள் கடந்த சில நாட்களாக நுங்கம் பாக்கத்தில் உள்ள டிபிஐ வளாகத்தில் தொடர் உண்ணாநிலைப் போராட்டத் தில் ஈடுபட்டு வந்தனர். அதை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள், ஆசிரியர் சங்கங்கள் முத லமைச்சருக்கு கோரிக்கை விடுத்தன இந்த நிலையில், இடைநிலை ஆசிரியர் சங்க பிரதிநிதிகளுடன் பள்ளி கல்வித்துறை செயலாளர் காகர்லா உஷா உள்ளிட்ட அதிகாரிகள் அக்.6 அன்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சம வேலைக்கு சம ஊதி யம் வழங்க பரிசீலனை செய்ய முத லமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதிய ளித்ததாக தெரிவிக்கப்பட்டது. இதை யடுத்து தங்கள் போராட்டத்தை திரும்ப பெறுவதாக இடைநிலை ஆசிரியர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
ஆதாரங்களை தாக்கல் செய்ய உத்தரவு
சென்னை, அக். 6- தமிழக அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின்,பி.கே. சேகர்பாபு மற்றும் எம்.பி. ஆ.ராசா ஆகியோரின் சனாதன பேச்சுகள் குறித்த ஆதாரங்களை தாக்கல் செய்ய இந்து முன்னணியை சேர்ந்த மனுதாரர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான இடங்களில் 2வது நாளாக சோதனை
சென்னை, அக்.6- திமுக எம்.பி. ஜெகத்ரட்சகனின் வீடு, அவருக்கு சொந்தமான கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் வெள்ளிக்கிழமையும் 2-வது நாளாக வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது. அரக்கோணம் தொகுதி திமுக எம்.பி.யும், முன்னாள் ஒன்றிய இணை அமைச்சருமான எஸ். ஜெகத்ரட்சகன், கல்வி நிறுவனம், மருத்துவமனை உட்பட பல்வேறு தொழில்களை நடத்தி வருகிறார். இந்த சோதனையின்போது பாதுகாப்புக்கு மத்திய தொழில் பாது காப்பு படையினர் உடன் உள்ளனர். இந்நிலையில், இரண்டாவது நாளாக சோதனை நடைபெற்றது. பூந்தமல்லி மருத்துவமனை, வாலாஜாபாத் மது பான ஆலை உள்ளிட்ட 30 இடங்களில் இந்த சோதனை நடைபெற்றது.
வங்கிக் கணக்கில் ரூ.756 கோடி இருப்பு: குறுஞ்செய்தியால் அதிர்ச்சி
தஞ்சாவூர்,அக்.6- தனது வங்கிக் கணக்கில் ரூ.756 கோடி இருப்பு இருப்பதாக குறுஞ்செய்தி வந்ததால் வாடிக்கையாளர் ஒருவர் அடைந்தார். தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் பகுதியை சேர்ந்தவர் கணேசன் (29). இவர் தனியார் நிறுவனத்தில் பணி புரிந்து வருகிறார். இந்நிலையில் கணேசன் நேற்று நள்ளிரவில் நண்பர் ஒருவருக்கு தனது கோட்டாக் மகேந்திரா வங்கி மூலம் ஆயிரம் ரூபாய் செலுத்திய நிலையில், அதற்கான குறுஞ்செய்தி அவருக்கு வந்த போது அவர் வங்கி கணக்கில் ரூ.756 கோடி இருப்பு தொகை இருப்பதாக குறுஞ்செய்தி வந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த கணேசன் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள வங்கிக்கு சென்று வங்கி மேலாளரிடம் இது தொடர்பாக புகார் அளித்துள்ளார். இதனையடுத்து வங்கி மேலாளர் எந்த விளக்கமும் கூறாமல், கணேசனுக்கு வந்த குறுஞ் செய்தி மற்றும் செல்போன் நம்பரை வாங்கி வைத்துக்கொண்டு போனில் தகவல் தெரிவிப்பதாக கூறி அனுப்பி வைத்துள்ளனர். இதனால் எந்த தகவலும் தெரியாத தால் கணேசன் வங்கியின் இருப்பு நிலையை எடுத்து பார்த்துள்ளார். ஆனால் அதில் 756 கோடி இருப்பு தொகை காட்டாமல் அவரது சேமிப்பு தொகையை மட்டுமே காட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. வங்கிகளில் இதுபோன்று அண்மையில் அதிகமான குளறுபடிகள் நடப்பதால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைகின்றனர். வங்கிகளில் நடக்கும் இந்த குளறுபடிக்குக் காரணம் என்ன என்பதை விளக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுகின்றன. ஏற்கனவே, சென்னையில் கார் ஓட்டு நரின் வங்கிக் கணக்கில் இப்படி ஒரு குளறுபடி நேரிட்டது குறிப்பிடத் தக்கது.
அதிமுக பெயர், கொடி, சின்னம் வழக்கு நவ.7-க்கு ஒத்திவைப்பு
சென்னை, அக்.6- அதிமுக பெயர், கொடி மற்றும் சின்னத்தை ஓ.பன்னீர் செல்வம் பயன்படுத்தத் தடை விதிக்கக்கோரி எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்கு வெள்ளியன்று விசாரணைக்கு வந்தது. அப் போது பன்னீர்செல்வம் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்படவில்லை என எடப் பாடி தரப்பில் சுட்டிக்காட்டப் பட்டது. அப்போது அதிமுக பொ துக்குழுவில் தன்னை நீக்கிய தீர்மானங்கள் செல்லும் என உயர்நீதிமன்றம் முன்பு வழங்கிய தீர்ப்பை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளதால், அந்த வழக்கை பொறுத்து இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் வேண்டுமென ஓபிஎஸ் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அதை ஏற்றுக்கொண்ட உயர் நீதிமன்றம் வழக்கை நவம்பர் 7-ஆம் தேதிக்கு தள்ளிவைத்தது.
வெள்ளக் கட்டுப்பாட்டு மைய திட்டம்
வெளிநாட்டு வங்கி உத்தரவாதத்தை ஏற்க அரசு மறுப்பு
சென்னை, அக்.6- வெள்ளக் கட்டுப்பாட்டு மையம் அமைக்கும் திட்டத்துக்கான டெண்டருக்கு வெளிநாட்டு வங்கி உத்தரவாதத்தை ஏற்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றத் தில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. சென்னையின் உரிய தரவுகள் சேகரிப்பு மற்றும் வெள்ள கட்டுப்பாட்டு மையம் அமைப்பதற்கான டெண்டர் கோரப்பட்டது. இதற்கு சேலத்தை சேர்ந்த எஸ்.எஸ்.டெக் என்ற நிறுவனம் விண்ணப்பித்திருந்தது. டெண்டரின் போது செலுத்த வேண்டிய வங்கி உத்தரவாத தொகைக்காக இங்கி லாந்தைச் சேர்ந்த வங்கியை அந்த நிறுவ னம் இணைத்திருந்தது. இதையடுத்து, இந்த உத்தரவாதத்தை அரசு ஏற்க மறுத்தது. இதை எதிர்த்து அந்த நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த மனு நீதிபதி என்.சேஷசாயி முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், அரசு சிறப்பு வழக்கறிஞர் சி.கதிரவன் ஆஜராகி, “டெண்டரின்போது உத்தரவாத தொகைக்காக வெளிநாட்டு வங்கியை இணைத்தால் அந்த வங்கியின் கிளை இந்தியாவில் செயல்பட வேண்டும். இவ்வாறு இல்லாதபட்சத்தில், அந்த உத்தர வாதத்தை ஏற்க முடியாது. அல்லது, உள்ளூரில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட வங்கியின் உத்தரவாதத்தை தாக்கல் செய்ய வேண்டும். இந்த விதிமுறைகளை அந்த நிறுவனம் பின்பற்றவில்லை” என தெரிவித்தார். இதற்கு நிறுவனத்தின் சார்பில் ஆஜ ரான வழக்கறிஞர், “தங்களுடைய வசதிக்கேற்ற வகையில்தான் வெளிநாட்டு வங்கியில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது. எனவே, உத்தரவாதம் நிராகரிக்கப்பட்டது தவறு” என்று வாதிட்டார். இதையடுத்து, எஸ்.எஸ். டெக் நிறுவனம் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட நீதிபதி, அரசின் நிபந்தனைகளை மனுதாரர் நிறுவனம் உரிய முறையில் பின்பற்ற வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.