புதுதில்லி, ஜூலை 31- 2022-23 நிதியாண்டிற்கான இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மதிப்பீட்டைச் சர்வதேச நாணய நிதியம் குறைத்து உள்ளது. கொரோனா பெருந்தொற்று காரண மாக உலகின் பெரும்பாலான நாடு களில் பொது முடக்கம் அறிவிக்கப் பட்டது. கொரோனா உருமாறிக் கொண்டே இருந்ததால், பல நாடு களும் அவ்வப்போது கட்டுப்பாடு களை விதித்து வந்தன. இதனால் உல கின் அனைத்து நாடுகளின் பொருளா தாரமும் மிகக் கடுமையாகப் பாதிக்கப் பட்டன. இதில் இருந்து மீண்டு வர சில ஆண்டுகள் வரை ஆகலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில், 2022-23 நிதி யாண்டில் இந்தியாவின் வளர்ச்சி என்ன வாக இருக்கும் என்பது குறித்து சர்வ தேச நிதியம் புதிய மதிப்பீடுகளை வெளி யிட்டு உள்ளது. அதில் 2022-23 நிதியாண்டில் இந்தியாவின் வளர்ச்சி 7.4 சதவிகிதமாக இருக்கும் எனக் கூறி, தனது முந்தைய மதிப்பீட்டைக் குறைத்துள்ளது.
இதற்கு முன்பு, இந்தியாவின் வளர்ச்சி 8.2 சதவிகித மாக இருக்கும் என்று சர்வதேச நிதியம் மதிப்பிட்டிருந்த நிலையில், அதி லிருந்து 0.8 சதவிகிதத்தைக் குறைத்து ள்ளது. இருப்பினும், இது இந்திய ரிசர்வ் வங்கி மதிப்பிட்டுள்ள 7.2 சதவிகி தத்தை விட சற்று அதிகமாகும். அண்மையில் வெளியான உலகப் பொருளாதார அவுட்லுக் ரிப்போர்ட்டில் 2023-24 நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதாரம் 6.1 சதவிகிதம் அளவிற்கே வளர்ச்சியடையும் என்று கணிக்கப்பட்டு இருந்தது. இதேபோல நோமுரா, மார்கன் ஸ்டான்லி நிறுவனங்களும் இந்தியா வின் பொருளாதார வளர்ச்சி மதிப் பீட்டை குறைத்தன. 2022-23 நிதி யாண்டில் இந்தியாவின் ஜிடிபி-யை 5.4 சதவிகிதம் என்று கணித்திருந்த நோமுரா நிறுவனம், அண்மையில், அதனை 4.7 சதவிகிதமாக குறைத்தது. மார்கன் ஸ்டான்லி ஆய்வு நிறுவனம் முன்பு 7.6 சதவிகிதம் என்று ஜிடிபி-யை கணித்திருந்தது. இதனை 40 புள்ளிகள் குறைத்து 7.2 சதவிகிதமாக மாற்றியமைத்துள்ளது.