states

சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடுக: சிபிஎம்

சென்னை, மார்ச் 5- பரமக்குடியில் பள்ளி மாணவியை கும்பல் பாலியல் வன்முறைக்கு உள் ளாக்கிய சம்பவத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையான கண்ட னத்தை தெரிவித்துள்ளது. இச்சம்ப வம் குறித்து சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று வலி யுறுத்தியுள்ளது.  இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:  இராமநாதபுரம் மாவட்டம், பர மக்குடி தனியார் பள்ளியில் ஒன்பதாம்  வகுப்பு படித்து வந்த மாணவி தொடர்ச்சி யாக கும்பல் பாலியல் வன்கொடுமை களுக்கு உள்ளாக்கப்பட்டது அதிர்ச்சி யையும், வேதனையையும் ஏற்படுத்தி யுள்ளது.

பள்ளிக் குழந்தை மீதான இக்  கொடூரத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயற் குழு வன்மையாக கண்டிக்கிறது.  பரமக்குடியில் ஒன்பதாம் வகுப்பு  படிக்கும் ஏழை மாணவி ஒருவரை ஒரு மாத காலமாக பள்ளிக்குச் செல்லவிடா மல் ஏமாற்றி கடத்திச் சென்று கும்பல்  பாலியல் வன்கொடுமைகள் செய் துள்ளனர். அச்சத்துடன் சிறுமி தனது  பெற்றோரிடம் தெரிவித்த விபரங்கள்  சாதாரணமானதல்ல. பொள்ளாச்சி யில் மாணவிகள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் வன்கொடுமை போன்று பர மக்குடியிலும் நிகழ்ந்துள்ளது என்பது தெரிய வருகிறது. இக்கொடூர குற்றத்தில் ஈடு பட்டுள்ள பரமக்குடி நகர் அதிமுக அவைத்தலைவர் மற்றும் பரமக்குடி நகர்மன்ற உறுப்பினர் சிகாமணி, மறத்தமிழர் சேனை தலைவர் புதுமலர் பிரபாகர், ராஜா முகமது, கயல்விழி, உமா ஆகியோர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இக்கொடூர பாலியல் வன்  முறையில் நகரத்தின் பல முக்கி யப்புள்ளிகளுக்கு தொடர்பு உள்ளதும், காவல்துறையில் உள்ள சிலரின் தொடர்பும் இருப்பதாகவும் தெரிய வருகிறது. எனவே, இவ்வழக்கை  உடனடி யாக சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி,  முழுமையான விசாரணை மேற்  கொண்டு குற்றவாளிகள் அனை வரும் கைது செய்யப்பட வேண்டுமென வும், பாதிக்கப்பட்ட மாணவி குறித்த விப ரங்கள் வெளிவராமல் பாதுகாத்து, அவ ருக்கு உரிய நிவாரணம் வழங்கிடுவ தோடு, அவர் படிப்பை தொடர்வதை உறுதி செய்திட வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழ் நாடு அரசையும், காவல்துறையையும் வலியுறுத்துகிறது.  இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.