முதலமைச்சர் தலையிட்டு உறுதிசெய்ய சிபிஎம் வலியுறுத்தல்
சென்னை,மே 8- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ் ணன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: தமிழக நிதியமைச்சர் மே 7 அன்று நடைபெற்ற மானியக் கோரிக்கையின் மீதான விவாதத்தின் போது மீண்டும் ஒருமுறை பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்துவது சாத்தியமில்லை என தெரிவித்திருக்கிறார். இந்த அறிவிப்பு ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன் நம்பி க்கையுடன் இருந்த அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. தமிழக முதலமைச்சர், தொடர்ச்சி யாக தேர்தல் அறிக்கையில் சொல்லப் பட்டுள்ள அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும் என்று உறுதிபட உத்தரவாதம் அளித்து வரும் நிலை யில், அமைச்சரவையில் கூட்டுப் பொறுப் புடன் செயல்பட வேண்டிய நிதிய மைச்சர், முதலமைச்சரின் கருத்துக்கு மாறாக முரண்பட்ட கருத்துக்களை தெரிவித்து வருவது பொருத்தமற்றது. நிதியமைச்சர் தெரிவித்துள்ள கருத்துக்களின் அடிப்படையில் பொருத்தமற்றதாகவும், உண்மைக்குப் புறம்பானதாகவும் இருப்பதை சுட்டிக் காட்ட விரும்புகிறோம்.
1.ராஜஸ்தான் அரசுக்கு “பி.எப்.ஆர்.டி.ஏ.” அனுப்பிய கடிதத்தை மேற்கோள் காட்டுகிறார். தனிநபர் கணக்கில் இருக்கிற பணத்தை எடுக்கும் பிரச்சனை ராஜஸ்தான் அரசுக்கு இருக்கிறதே தவிர, தமிழக அரசு பி.எப்.ஆர்.டி.ஏ. வில் சேரவில்லை என்கிற போது தமிழகத்திற்கு அந்தப் பிரச்சனையே கிடையாது. எனவே இதை மேற்கோள் காட்டுவது பொருத்தமற்றதாகும். 2. நிதியமைச்சர் ஏற்கெனவே குறிப் பிட்டதைப் போல தமிழகத்தில் அங்கீ கரிக்கப்பட்ட பணியிடங்கள் 15 லட்சம். ஆனால் 9 லட்சம் பேர் மட்டும் தான் தற்போது பணியில் இருக்கிறார்கள். எனவே நிரப்பப்படாத 6 லட்சம் பேரின் பணியையும் சேர்த்து, பணியில் இருக் கும் 9 லட்சம் பேர் தான் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். எனவே, நிதிச் சுமை என காரணம் காட்டுவதுசரியல்ல. 3. ஜிஎஸ்டி, நீட் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் ஒன்றிய அரசு எடுக்கிற நிலைபாடுகளிலிருந்து வேறுபடுகிற நிலையை தமிழ்நாடு அரசு சரியாகவே எடுத்திருக்கிறது. ஆனால் இந்தப் பிரச்சனையில் மட்டும் நாடு முழுவதும் இருக்கக்கூடிய விஷயங்களைக் காரணம் காட்டுவது பொருத்தமல்ல. அது நவீன தாராளமயக் கொள்கை யை அமல்படுத்துகிறவர்கள் ஊழியர் களுக்கு பென்சன் உள்ளிட்ட உரிமை களை பறிக்கிற வகையில் சமீபத்திய காலத்தில் சொல்லப்படுகிற வாதங் களே தவிர, அதில் புதிதாக ஏதும் கிடை யாது. நவீன தாராளமயக் கொள்கை முழுக்க முழுக்க சமூகநீதிக்கு எதி ரானது. சமூக நீதிக்கு எதிரான கருத்துக் களைக் கொண்ட அறிக்கையை, சமூக நீதியை நிலைநாட்டுகிற ஒரு அரசின் அங்கமாக இருக்கக்கூடிய நிதி யமைச்சர் மேற்கோள்காட்டுவது ஆச்ச ரியமாக இருக்கிறது.
4. நிதியமைச்சர் புதிய பென்சன் திட்ட த்திற்கு நபர் ஒருவருக்கு ஆண்டுக்கு சரா சரியாக ரூ. 50 ஆயிரம் ஒதுக்க வேண்டி யதிருக்கும் என்றும், பழைய பென்சன் திட்டத்தை அமலாக்கினால் நபர் ஒரு வருக்கு ஆண்டுக்கு சராரியாக ரூ. 2 லட்சம் ஒதுக்க வேண்டியதிருக்கும் என்றும் குறிப்பிட்டிருக்கிறார். ஓய்வூ தியத்திற்காக எந்த காலத்தில் வாங்கு கிற சம்பளத்தில் 40 சதவிகிதம் ஒதுக்கப் பட்டது என்பதை நிதியமைச்சர் விளக்க வேண்டும். அப்படி எதுவும் நடக்க வில்லை. பழைய பென்சன் திட்டத்தை அமலாக்குவதால் கூடுதல் நிதிச் செலவு ஏற்படும் என்றாலும் அரசின் திட்டங்களை அமல்படுத்தும் பணியில் பல்லாண்டு காலம் உழைத்த தனது ஊழியர்களுக்கு தான் அளித்த வாக்கு றுதியை நிறைவேற்றுவதை மக்களுக் கான அரசு, சுமை என கருதக் கூடாது, அதை தன் கடமையாக உணர்ந்து நிறை வேற்ற வேண்டும். எனவே, ஒட்டுமொத்த அரசு ஊழி யர்கள், ஆசிரியர்கள் மற்றும் அவர் தம் குடும்பத்தினர் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு இருக்கும் சூழ்நிலையை யும், அதன் நியாயத்தையும் கணக்கில் கொண்டு, பழைய ஓய்வூதிய திட்ட த்தை நிறைவேற்றுவதற்கு தெளி வான அறிவிப்பினை வெளியிட முத லமைச்சர் உறுதி செய்திட வேண்டும்.