states

கேள்வி நேரத்திலிருந்து....

போக்குவரத்து நகரம்!

சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது  உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விக ளும் அமைச்சர்களின் பதிலும் வருமாறு:- செ. சுந்தரராஜன்: நாமக்கல் மாவட்டம் சங்கரியில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லாரி களும் உள்ளதால் அந்த பகுதியில் ஆட்டோ  தொழிற்பேட்டை அமைக்க அரசு முன்வருமா? அமைச்சர் தங்கம் தென்னரசு: ஆட்டோ தொழிற்பேட்டை அமைக்க சாத்திய கூறுகள்  இல்லை. போக்குவரத்து நகரம் அமைப்பது குறித்து அரசு பரிசீலிக்கும்.  அ.நல்லதம்பி: திருப்பத்தூர் மாவட்டம் மடவாளம் கிராமத்தில் மண்பாண்ட தொழிற்கூடம் அமைக்கப்படுமா? அமைச்சர் ஆர்.காந்தி: மண்பாண்ட தொழி லாளர்கள் கூட்டுறவு சங்கம் அமைத்தால் கடன் உதவி செய்து அவர்களது தொழிலை அரசு பாதுகாக்கும். தமிழ்நாடு முழுவதும் 154 கோஆப்டெக்ஸ் நிறுவனங்கள் செயல்பட்டு  வருகிறது. இவை அனைத்தும் கடந்த காலங்களில் நலிவுற்று கிடந்தன. இப்போது ஒவ்வொன்றாக உற்பத்தி மற்றும் விற்பனையை அதிகரித்து வருகிறது. இதன் மூலம் நவீன மயமாக்கப்பட்டுவருகிறது.

பேருந்துகள் இயக்கம்

ஈஸ்வரன்: கொரோனா பெருந்தொற்று காலத்தில் நிறுத்தப்பட்டபேருந்துகளை மீண்டும் இயக்க வேண்டும்.  அமைச்சர் சிவசங்கரன்: தமிழ்நாட்டில் கொரோனா பெருந்தொற்றின் போது மாநிலத்தின் பல்வேறு வழித் தடங்களிலும் நிறுத்தப்பட்ட அனைத்து பேருந்துகளையும் மீண்டும் இயக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. மினி பேருந்தை மீண்டும் இயக்குவது குறித்தும் உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். விரைவில் தீர்வு காணப்படும்.

விஷக்கடி மருந்து

ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளை தரம் உயர்த்த வேண்டும், அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டியதன் அவசியம் குறித்து உறுப்பினர்கள் பலரும் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்,“தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களில் விஷக் கடிக்கான மருந்து தேவைக்கு ஏற்ப வழங்கப்படும். எந்த பகுதியிலும் இல்லை என்ற ஒரு நிலையே ஏற்பாடாது. சிதலமடைந்தும், பழுதடைந்த நிலையிலும் அனைத்து ஆரம்ப சுகாதர நிலையங்களுக்கு சொந்தமாக கட்டடம் கட்டிக்கொடுக்கப்படும். அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள மருத்துவர் காலிப் பணியிடம் மற்றும் சிடி ஸ்கேன் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்படும்.