சென்னை, ஆக. 31- பிள்ளையார் சிலைகளை கடலி லும், நீர்நிலைகளிலும் கரைக்க வேண் டாம் என பூவுலகின் நண்பர்கள் அமைப்பு வேண்டுகோள் விடுத்துள் ளது. விநாயகர் சதுர்த்தி நாடு முழுவ தும் புதனன்று (ஆக. 31) கொண்டாடப் பட்டது. பொது இடங்களில் பல வண்ணங்கள் மற்றும் பல வடிவங்களி லும், வீடுகளில் களிமண்ணில் வடிவமைக்கப்பட்ட சிலைகளையும் வைத்து பொதுமக்கள் வழிபட்டனர். இந்நிலையில், பிள்ளையார் சிலை களை கடலிலும், நீர்நிலைகளிலும் ஏன் கரைக்கக்கூடாது என்பது குறித்து பூவுலகின் நண்பர்கள் இயக்கதைச் சேர்ந்த சுந்தர்ராஜன் விளக்கமளித் துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகை யில், “பிள்ளையார் உள்ளிட்ட எந்த சிலைகளையும் கடலில் அல்லது நீர்நிலைகளில் கரைக்கக்கூடாது. ரசாயன வண்ணங்கள் மற்றும் பிஓபி கொண்டு செய்யப்படும் சிலைகள் கடலில் உள்ள உயிர்வளியை குறைக் கும் அதனால் கடல்வாழ் உயிரினங்கள் கடுமையாக பாதிக்கப்படும். வண்ணங்களில் பயன்படுத்தப் படும் கன உலோகங்கள் சின்னசின்ன உயிரினங்களில் படியும், அவற்றை சின்ன மீன்கள் உட்கொள்ளும், சின்ன வைதான் பெரிய மீன்களுக்கு உணவு, பெரிய மீன்தான் நமக்கு உணவு, அப்படியெனில் நம்முடைய உணவுச் சங்கிலிக்கு கனஉலோகங்கள் வந்து சேரும். கடலில் உள்ள சின்ன உயிரி னங்கள் பாதிப்படையும் போது நமக்கான ஆக்சிஜன் கிடைப்பது சிக்கலாகும். ஏனெனில் மனிதர்களுக்கு தேவை யான ஆக்சிஜனில் 70 சதவிகிதம் தயாரிப்பது கடலில் உள்ள சின்ன சின்ன உயிரினங்கள்தான். ஏற்கனவே கால நிலை மாற்றத்தால் கடலின் அமிலத் தன்மை அதிகரித்து வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவே தான் கடலில் எந்த சிலைகளையும் கரைக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம்.