திருப்பூர், நவ.4– திருப்பூரில் ஏழைப் பெண்கள் பெயரில் ஜிஎஸ்டி கணக்கு தொடங்கி, கோடிக்கணக் கில் பணப்பரிமாற்றம் செய்து வரி ஏய்ப்பு மோசடி செய்யப்பட்டிருப்பது வெளிச்சத் திற்கு வந்துள்ளது. சம்பந்தப்பட்ட ஏழைப் பெண்கள், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெற விண்ணப்பித்து, அந்த விண் ணப்பங்கள் நிராகரிக்கப்பட்ட பின்னணி யில் இந்த மோசடி அம்பலத்துக்கு வந்துள்ளது. திருப்பூர் மாவட்டம், நடராஜா தியேட் டர் அருகே நொய்யல் ஆற்றங்கரை, பெத்தி செட்டிபுரம் பகுதியில் குடியிருந்து வரும் பெண்கள் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெற விண்ணப்பித்துள்ளனர். இதில் கணிசமானோரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுவிட்டன. மிகவும் ஏழ்மை நிலையில் இருக்கும் தங்களின் விண்ணப் பங்கள் நிராகரிக்கப்பட்டதால் ஏமாற்றம டைந்த அப்பெண்கள், பொது இ - சேவை மையத்திற்குச் சென்று எதற்காக தங்கள் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன என்று விசாரித்துள்ளனர். இதில் 84 பெண்களின் பெயரில் நிறுவ னங்கள் நடத்துவதாலும், ஒவ்வொரு வரும் பணப்பரிமாற்றம் செய்து ஜிஎஸ்டி கணக்கு வைத்திருப்பதாலும் கலைஞர் மக ளிர் உரிமைத்தொகை பெற தகுதியில்லை என்று விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டி ருப்பது தெரியவந்துள்ளது. இதைக்கேட்டு அப்பெண்கள் அதிர்ச்சி அடைந்தனர். சாதாரண பனியன் தொழிலாளர்கள், கூலி வேலைக்குச் செல்லக்கூடியவர்கள் என்ற ஏழ்மை நிலையில் இருக்கும் தங்கள் பெயரில் ஜிஎஸ்டி கணக்கு இருப்பதாக தெரி வித்தது குழப்பத்தை ஏற்படுத்தியது. அவர் களுக்குள் இதுபற்றி கலந்து பேசியபோது, இந்த மோசடியை யார் செய்திருப்பார்கள் என்ற சந்தேகம் சிலர் மீது ஏற்பட்டது.
குறிப்பாக, நீர்நிலைப் புறம்போக்கு களில் குடியிருக்கும் அவர்களுக்கு அடுக்கு மாடி குடியிருப்புகளில் வீடு ஒதுக்கீடு பெற் றுத் தருவதாக பல்லடத்தைச் சேர்ந்த சிவக்குமார், கார்வேந்தன், விஜயகுமார், தமிழ்செல்வன் என்ற கும்பல் மேற்படி பெண் களிடம் ஆதார் அட்டை, வங்கி கணக்கு விபரம், பான் அட்டை ஆகியவற்றை கேட்டுப் பெற்றது நினைவுக்கு வந்தது. எனவே இவர்கள்தான் தங்கள் பெய ரில் போலி நிறுவனங்கள் ஏற்படுத்தி ஜிஎஸ்டி மோசடியில் ஈடுபட்டிருக்கக்கூடும் என்று தற்போது அவர்கள் சந்தேகம் தெரி வித்துள்ளனர். குறிப்பாக, பின்னலாடை சரக்குகளுக்கு 5 சதவிகித வரி விதிக்கப்படு கிறது. உற்பத்தியாகும் பொருட்களின் மதிப்பு ரூ.50 ஆயிரத்திற்கு மேல் இருந்தாலோ, 10 கிலோ மீட்டருக்கு மேல் சரக்குகளை வாக னங்களில் எடுத்துச் சென்றாலோ ‘இ-வே பில்’ எனப்படும் மின்னணு பில் உருவாக்கப் பட வேண்டும். திருப்பூரில் வணிக வரித் துறையினர் சோதனை தீவிரமாக நடை பெற்று வரும் நிலையில், ஜிஎஸ்டி கணக்கு, இ-வே பில் காட்டி தப்புவதற்காக, இந்த மோசடியில் ஈடுபட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. எனினும் ஜிஎஸ்டி கணக்கு துவங்கு வதற்கு, நிலையான முகவரி விபரம் தேவை. அவ்வாறிருக்க எப்படி பெரும் எண்ணிக் கையில் இதுபோல் போலி நிறுவனங்கள் ஏற்படுத்தி மோசடி செய்வது அரசின் வணிகவரித்துறை கவனத்துக்குத் தெரியா மல் போகும்? என்றும் கேள்வி எழுப்பப்படு கிறது. இந்த பெரும் மோசடியை செய்தவர் களைக் கண்டுபிடித்து தண்டிப்பதற்கு அரசு நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேசமயம் தங்களுக்கு நியாயமான முறை யில் மகளிர் உரிமைத்தொகை கிடைக்கவும் அரசு சிறப்பு கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட பெண்கள் வலியுறுத்தியுள்ளனர்.