states

அரசுக் கல்லூரிகளில் சேர நான்கு லட்சம் பேர் விண்ணப்பம்

சென்னை, ஜூலை 29- தமிழகத்தில் உள்ள 163 அரசுக் கலை, அறி வியல் கல்லூரிகளில் 1.20 லட்சம் இடங்கள் உள்ள நிலையில் கல்லூரிக் கல்வி இயக்கு நரகத்தின் (டிசிஇ) தரவுகளின்படி, இந்த ஆண்டு  தமிழக அரசுக் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர 4,07,045 பேர் விண்ணப்பித்து ள்ளனர். ஆனால், விண்ணப்பப் பதிவு முடிவுடையும் புதனன்று விண்ணப்பித்த 4 லட்சம் பேரில் 2,98,056 பேர் மட்டுமே விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தியுள்ளனர். கட்டணம் செலுத்தியவர்கள் விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது . 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெறும் மாணவர் களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதும், பொறியியல் மீதான ஆர்வம் குறைந்து வருவதும், கலை மற்றும் அறிவியல் கல்லூரி களுக்கான தேவையை உயர்த்தியுள்ளது. குறைந்த கட்டணமும், நல்ல ஆசிரியர்களும் இருப்பதால், அதிகமானோர் விண்ணப்பித்து வருகின்றனர் என்கின்றனர் கல்வியாளர்கள்.