நாகர்கோவில்,மே 7- தனி மனிதனின் வாழ்க்கையை தகவல் தொழில்நுட்பம் தீர்மானிக்கிறது என்று இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். குமரி மாவட்டம் கூட்டாலுமூடு பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் பேசியதாவது: இந்தியாவில் உள்ள ஒவ்வொரு தனி மனிதனுடைய வாழ்க்கையை தகவல் தொழில் நுட்பம் தீர்மானிக்கி றது. அந்த வகையில் செயற்கைக் கோள்களின் துணையில்லாமல் ஒரு மனிதனால் அரைமணிநேரம் கூட வாழ முடியாது. செயற்கைக்கோள் வருவதற்கு முன்னால் புயல் இயற்கை சீற்றங்க ளால் ஆயிரக்கணக்கான மக்கள் இறப்பது வழக்கம்.
ஆனால் செயற்கைக் கோள் உள்ளே வந்த பின்னர் புயல் வீசுவதற்கு ஒரு வாரம் முன்பே எச்ச ரிக்கை அறிவிப்பு விடுக்கப்படுகின்றது. இதனால் உயிர்ப்பலி எண்ணிக்கை இன்று மிக குறைந்துள்ளது. மீனவர்கள் கடலில் மீன்பிடிக்க அவர்களுக்கு வழங்கியுள்ள சேட்டி லைட் கருவியினால் மீன் எங்கிருக்கி றது என்பதை அவர்களால் கண்டறிய முடியும். எல்லை தாண்டி படகு சென்றால் எச்சரிக்கையும் விடுக்கிறது. இப்படி மனிதனின் ஒவ்வொரு நிமிட வாழ்க்கையும் இன்று விண்வெ ளித்துறை தீர்மானிக்கிறது. இந்தியா வில் இருந்து ஏவப்பட்ட 55 செயற்கைக் கோள்கள் நம்முடைய நாட்டை கண்காணித்துக் கொண்டிருக்கிறது. விண்வெளி துறை ஆராய்ச்சியில் மாணவர்கள் ஈடுபட வேண்டும். மாணவர்கள் விரும்பிய பாடங்களைத் தான் படிக்க வேண்டும். பெற்றோர்களின் திணிப்பை ஏற்று பாடங்களை படிக்கக் கூடாது. மாணவர்கள் ஒரு இலக்கை நிர்ணயித்து, அந்த இலக்கை நோக்கி பயணிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.