5 ஆண்டுகள் படித்த எம்பிபிஎஸ் கல்வி யில் ‘தேர்வானவர்கள்’ தான் முது கலை மருத்துவக் கல்விக்கு விண்ணப் பிக்கவே அனுமதிக்கப்படுவார்கள்; அந்த 5 ஆண்டுகள் படித்து, ‘தேர்வானவர்’ ஒரு சரியான விடை கூட எழுத முடியாமல் தான் ‘0’ வாங்க முடியும். ஒழுங்காய்ப் படித்து,கடினமான தேர்வுக ளைத் தாண்டித் தான் எம்பிபிஎஸ் முடித்து இந்த முதுகலைக்கான பிஜி நீட் (PG NEET)க்கு விண்ணப்பித்து எழுதுகிறார்கள். தேவையான என்று நிர்ணயிக்கப்பட்ட மதிப் பெண்களைப் பெறுபவர்கள் தான் முது கலை மருத்துவக் கல்விக்கு அனுமதிக்கப் படுகிறார்கள் (இது யுஜிநீட் (UG NEET)கட்டா யமாகும் முன்பே ஆரம்பித்து விட்டது). யாரோ 5 அல்லது 10மதிப்பெண்கள் கூட வாங்க முடியாமல் பெட்டி பெட்டியாய்ப் பணம் வைத்திருப்பவர்கள், அவர்களிடம் கற்றைக்கற்றையாய்க் காசு கறக்கும் தனியார் மருத்துவக் கல்லூரிகள்- இவ்விரு வர்க்குமான அறிவிப்பு இது. பெயருக்கு முன்னால் டாக்டர், பெய ருக்குப் பின்னால் பட்டம் என்று மட்டும் வேண்டும் கூட்டம் இன்னும் நிறைய உண்டு. கல்யாணச் சந்தையிலும் இது விலைகூடும் ஒரு விவரிப்பு என்பதால். இதை விடக் கேவலமாய் மருத்துவக் கல்வி இனியும் ஆகிவிட முடியாது. யாரோ ஒருவர்க்காக இதுவே யுஜி நீட்டி லும் அடுத்து நடக்கலாம். நாமும் இரண்டு நாட்கள் கோபப்பட்டு விட்டு அடுத்த அரசியல் நாடகம்/ விளம்ப ரத்தால் பிரம்மாண்டமான திரைப்படம் பற்றி இங்கே பேசிக்கொண்டிருக்கலாம். “percentage/percentile என்று இது இன்னமும் சரியாக நடப்பதாகச் சிலர் பேச முற்படுகிறார்கள். இம்முறை எதற்கும் சரி யான பதில் தெரியாமல், தவறான விடை எழுதினாலும் எம்டி/எம்எஸ் படிக்க நிறைய பணம் கொடுத்தால் சில கல்லூரிகளில் கிடைக்கும். இம்முறை -40 வாங்கினாலும் அனுமதிக்கலாம் என்பதே இந்த அறிவிப்பு சொல்லும் செய்தி. மருத்துவர் ருத்ரன்