states

மீன்பிடி தடைக்கால நிவாரணத்தை இந்தாண்டே உயர்த்தி வழங்குக

சென்னை, ஏப்.16 - மீன்பிடி தடைக்கால நிவாரணம் வழங்கப்படும் என்ற திமுக தேர்தல்  வாக்குறுதியை அரசு நிறைவேற்ற வேண்டும் என்று தமிழ்நாடு மீன் பிடி  தொழிற்சங்க கூட்டமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது. இதுகுறித்து கூட்டமைப்பின் தலைவர் ஜி.செலஸ்டின், செயல் தலைவர் எம்.கருணாமூர்த்தி,  பொதுச்செயலாளர்  எஸ்.அந்தோணி, பொருளாளர் எஸ்.ஜெயசங்கரன்  ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் கிழக்கு கடல் பகுதியில்  மீன்களின் இனப்பெருக்க காலத்தை யொட்டி மீன்வளத்தை பாதுகாத்திடும் வகையில் ஏப்ரல் 15 முதல் ஜூன் 14 வரையிலும், மேற்கு கடல் பகுதியில் ஜூன் 15 முதல் ஆகஸ்ட் 14 வரையிலும் 61 நாட்களுக்கு மீன்பிடி தடை காலம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. விசைப்படகுகள் மற்றும் இழுவைப் படகுகள் பயன்படுத்தி கடலில் மீன்பிடிக்கக்கூடாது என்று தமிழக மீன்வளத்துறை அறிவித்துள்ளது.

இதற்கான இடைக்கால நிவாரணமாக மீனவ குடும்பங்களுக்கு தமிழக அரசு வழங்கும் ரூ 5000 போதுமானது அல்ல.  ஏற்கனவே 45 நாட்கள் என்றிருந்த நிலை யில் 2017ம் ஆண்டு முதல் 61 நாட்க ளாக அறிவிக்கப்பட்டு அமலபடுத்தப் பட்டு வருகிறது. இக்காலத்தில் மீனவர் கள் தங்களது விசைப்படகுகளை பாதுகாப்பாக நிறுத்துவதோடு படகுகள் மற்றும் இஞ்ஜின், வலை களை பராமரிப்பு செய்வதற்கான செலவு களும் அதிகரித்துள்ளன.  வருமானம் இல்லாத நிலையில் மீனவ குடும்பங்கள் பட்டினியால் வாழக்கூடிய சூழ்நிலை உள்ளது. எனவே நிவாரண தொகையை ரூ 5000க்கு பதிலாக ரூ 15,000 ஆக உயர்த்தி  வழங்கிட வேண்டும் என தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பு (சிஐடியு) உள்பட பல்வேறு மீனவர் அமைப்புகள் அரசுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர். ஒன்றிய அரசின் பெட்ரோல், டீசல்,  சமையல் கியாஸ் விலை உயர்வு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வால் மீனவர்கள் வாழ்க்கை நடத்தவே சிரமப்படுகின்றனர். எனவே, தமிழக அரசு தேர்தல் காலத்தில் வாக்குறுதியளித்த மீன்பிடி தடைக்கால நிவாரணம் ரூ.8000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என்பதை இந்த ஆண்டே அறிவித்து உடனடியாக வழங்கிட வேண்டும். மேலும் மீன்பிடி தடைக்கால நிவாரணமாக ரூ 15,000 என்பதை  வரும் ஆண்டிலிருந்து அமல்படுத்த வேண்டுமென தமிழக முதல்வரையும், மீன்வளத்துறை அமைச்சரையும் மற்றும் இயக்குநரையும் கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.