தூத்துக்குடி.ஏப். 1 கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் கலை ஞர் உணவகம் அமைப்பது என நகர்மன்ற முதல் கூட்டத் தில் தீா்மானம் நிறை வேற்றப்பட்டது. கோவில்பட்டி நகர்மன்றத் தின் முதல் கூட்டம் நகர் மன்றத் தலைவர் கா.கரு ணாநிதி தலைமையில் நடை பெற்றது. நகர்மன்ற துணைத் தலைவர் ஆர்.எஸ்.ரமேஷ், நகராட்சி ஆணையா் ஓ. ராஜாராம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் வித்யா பிரகா சம் மனவளா்ச்சி குன்றியோ ருக்கான பள்ளியில் ஒரு லட்சம் மதிப்பில் குடிநீா் வசதி, மேற்கூரை அமைக்கும் பணி, நகர்மன்ற கூட்டரங்கில் முன்னாள் நகர்மன்றத் தலை வர்களின் உருவப்படங் களை வைப்பது, மாவட்ட அரசு தலைமை மருத்துவ மனையில் கலைஞா் உண வகம் அமைப்பது, கோவில் பட்டியில் சுமார் 30 பேரை முதியோர் உதவித் தொகை, இதர உதவித் தொகை பெறு வதற்கான வறுமைக்கோடு பட்டியலில் இணைப்பது, ரூ. 10.50 லட்சத்தில் பூங்கா மேற்கு சாலையை சீரமைப் பது உள்ளிட்ட 23 பொருள்கள் அடங்கிய தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், அம்மா உண வகம் - கலைஞா் உணவகம், சாலைப் பணிகள், நகா்மன்ற காலிப் பணியிடங்கள், தெருவிளக்கு பராமரிப்பு, நாய்கள் தொல்லை, கால் நடைகளால் போக்கு வரத்துக்கு இடையூறு, சுகா தாரப் பணி, ஓடைகள் தூா்வா ருதல், குடிநீா் தேவை உள்ளிட் டவை குறித்து கவுன்சி லர்கள் பேசினா். அவா்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என நகா்மன்றத் தலைவா் பதிலளித்தா ர். கூட்டத்தில் நகராட்சிப் பொறியாளா் ரமேஷ், உதவிப் பொறியாளா் பிரதான்பாபு, சுகாதார அலு வலா் நாராயணன் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகா்மன்ற உறுப் பினா்கள் கே.சீனிவாசன், எல்.பி.ஜோதி பாசு, முத்து ராஜ், முத்து லட்சுமி, விஜயா உள்ளிட்டோர் பங்கேற்றனா்.