சென்னை, ஜூன் 9- அரியலூர் ஜெயங்கொண்டம் அருகே பழுப்பு நிலக்கரி சுரங்கம் மற்றும் மின் உற்பத்தி திட்டத்துக்காக 11 கிராமங்களில் கையகப்படுத்தப்பட்ட நிலத்தை மீண்டும் உரியவர்களிடம் ஒப்படைக்க அரசாணை பிறப்பிக்கப் பட்டுள்ளது. இதுகுறித்து, தொழில்துறை செய லர் எஸ்.கிருஷ்ணன் வெளியிட்ட அர சாணை வருமாறு:- அரியலூர் மாவட்டத்தில், டிட்கோ நிறுவனத்துக்காக பழுப்பு நிலக்கரி சுரங்கம் மற்றும் மின் உற்பத்தி திட்டத் துக்காக, உடையார்பாளையம் வட்டத்துக்குட்பட்ட12 கிராமங்களில் 4,017 எக்டேர் நிலத்தை எடுக்க கடந்த 1997இல் அரசு உத்தரவிட்டிருந்தது. இதில், 3,390 எக்டேர் அதாவது 8,373 ஏக்கர் நிலம், ஏக்கர் ஒன்றுக்கு ரூ.35 ஆயிரம் வீதம், ஜெயங்கொண்டம் மற்றும் உடையார்பாளையம் வட்டங்க ளுக்கு உட்பட்ட 13 கிராமங்களில் 3,500 பட்டாதாரர்களிடம் இருந்து பெறப்பட்டது. இந்த நிகழ்வில், தங்க ளுக்கு கூடுதல் இழப்பீடு கேட்டு 10 ஆயிரம் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.
இதை விசாரிக்க 2 சிறப்பு நீதி மன்றங்கள் அமைக்கப்பட்டு, விசா ரணை நடத்தி 70 விழுக்காடு வழக்கு கள் தீர்க்கப்பட்டன. இழப்பீட்டை 43 மடங்கு உயர்த்தி ஏக்கருக்கு ரூ.15 லட்சம் என நிர்ணயித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து மேல் முறையீடு செய்யப்பட்ட நிலையில், 2017இல் உயர்மட்ட குழு அமைக்கப் பட்டு கூடுதல் இழப்பீடு வழங்க நட வடிக்கை எடுக்கப்பட்டது. இந்நிலை யில், கடந்தாண்டு செப்டம்பர் மாதம் டிட்கோ செயல் இயக்குநர், அரசுக்கு எழுதிய கடிதத்தில், நிலத்துக்கான இழப்பீடு அதிகரிப்பதால், திட்டத்தை அங்கு செயல்படுத்துவது சாத்திய மில்லை என்று தெரிவித்தார். இந்தச் சூழலில், அரசுக்கு நில நிர்வாக ஆணையர், அரியலூர் மாவட் டத்தில் உள்ள ஜெயங்கொண்டம், கீழக்குடியிருப்பு, தண்டலை, எடை யார், கட்டத்தூர், கூவத்தூர், உடையார் பாளையம், எலையூர், சூரியமணல், தேவன்னூர், வரியன்காவல் ஆகிய 11 கிராமங்களில் எடுக்கப்பட்ட நிலங் களை அதன் பழைய உரிமையா ளர்களிடம் திருப்பியளிக்கலாம் என் றும், ஏற்கெனவே வழங்கப்பட்ட இழப்பீட்டை திரும்பப் பெற தேவை யில்லை என்றும் பரிந்துரைத்தார். இதை ஏற்றுக் கொண்ட தமிழக அரசு, நிலத்தை திரும்பி வழங்க உத்த ரவிட்டுள்ளது. அரசிடம் இருந்து எந்த வொரு இழப்பீட்டையும் கோரமாட் டோம் என்று நில உரிமையாளர்களிடம் கடிதம் பெற்ற பிறகு நிலத்தை அவர் களிடம் ஒப்படைக்க உத்தரவிடப்படு கிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. தமிழக அரசின் இந்த அறிவிப்பை அறிந்த 11 கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள், பட்டாசு வெடித்து தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தனர். இதில், மேலூர், இலையூர் மேற்கு ஆகிய கிராமங்களில் நிலம் கொடுத்த மக்கள், கூடுதல் இழப்பீடு தொகை கொடுத்தால் மட்டுமே, நிலங்களைத் திரும்பப் பெறுவோம் என்று கூறியுள்ள தால், அவர்களுக்கு நிலங்களை திரும்ப ஒப்படைப்பது நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. ஒரு திட்டத்திற்காக விவசாயிகளிடம் இருந்து நிலத்தை கையகப்படுத்தி பத்தாண்டு காலத்திற்கும் மேலாக பயன்படுத்தாமல் இருந்தால் அந்த நிலத்தை உரிய விவசாயிகளிடமே திருப்பி கொடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கமும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் தொடர்ச்சியாக போராட்டம் நடத்தி வந்தது. இந்த நிலையில் 25 ஆண்டு களுக்கு பிறகு அந்த போராட்டத்திற்கு இப்போது வெற்றி கிடைத்திருக்கிறது.