அமெரிக்காவுக்குச் சென்று கல்வி பயிலும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை இது வரை இல்லாத வகையில் 2,69,000-ஆக உயர்ந்துள்ளது.
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் மற்றும் புறநகர் பகுதிகளில் தீபாவளி கொண்டாட்டத்தில் பட்டாசு வெடித்த பொழுது 50-க்கும் மேற்பட்டோர் கண்ணில் படுகாயத்து டன் சரோஜினி தேவி கண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் தீபா வளி பண்டிகையின் போது பட்டாசு வெடித்தது தொடர்பாக அண்டை வீட்டாருடனான மோதலில் தந்தை - மகன் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டனர்.
கர்நாடக மாநிலம் உடுப்பி அருகே உள்ள கங்கொலி துறைமுகத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 11 படகுகள், 2 இருசக்கர வாகனங்கள் எரிந்து சேதம் அடைந்துள்ளன.
கர்நாடக மாநிலம் பெங்களூரில் இருந்து கோவா நோக்கிச் சென்ற யுகே 881 என்ற விஸ்தாரா விமானம் கோவா தபோலிம் விமான நிலையத்தில் தரையிறங்க அனுமதி மறுக்கப்பட்ட தால், மீண்டும் பெங்களூரு கெம்பேகவுடா சர்வ தேச விமான நிலையத்துக்கு திருப்பி விடப்பட்டது.
மலையாள நடிகர் கலாபவன் மணி மர்மமான முறையில் மரணமடைந்த விவகாரத்தில் திடுக்கிடும் திருப்பம் ஏற்பட்டுள்ளது. தினசரி 12 முதல் 13 பாட்டில் பீர் குடித்ததே கலாபவன் மணி மரணத்துக்கு காரணம் என்றும், ஏற்கனவே நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்த கலாபவன் மணிக்கு கல்லீரல் பாதிப்பும் இருந்துள்ளது என கேரள ஐபிஎஸ் அதிகாரி உன்னிராஜன் தகவல் தெரிவித்துள்ளார். கலாபவன் மணி 2016 மார்ச் 6 அன்று மர்மமான முறையில் உயிரிழந்தார்.
கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் உள்ளது ஹாசனாம்பாள் கோவில். தீபா வளி தினத்தன்று மட்டும் திறக்கப்படும் இந்த கோவி லில் வழிபட வந்த மாநில கலால்துறை அமைச்சர் ஆர்.பி. திம்மாபூரை பெண் போலீசார் ஒருவரால் திடீ ரென தடுத்து நிறுத்தப்பட்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதற் கான காரணத்தை மாவட்ட வருவாய்த்துறை அதி காரி விசாரணை நடத்தி வருகிறார். பெண் போலீ சார் தடுத்து நிறுத்தியதற்கு காரணம் எதுவும் கேட்கா மல் அமைச்சர் ஆர்.பி. திம்மாபூர் கோவிலை விட்டு அவராகவே வெளியேறினார்.
தீ விபத்தில் சிக்கி 9 பேர் பலி
தெலுங்கானா மாநிலம் ஹைதரா பாத் அருகே நம்பப்பள்ளி பகு தியில் உள்ள அடுக்குமாடி குடி யிருப்பின் தரை தளத்தில் ரசாயனக் கடை ஒன்று இயங்கி வருகிறது. திங்க ளன்று காலை இந்த ரசாயனக் கடையில் இருந்த ரசாயனப் பொருட்களில் திடீ ரென தீப்பற்றி மளமளவென குடியிருப்பு பகுதிகளுக்கும் தீ பரவியது. தீயணைப்பு வீரர்கள், தேசிய பேரிடர் மீட்பு பணி வீரர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்தாலும், ரசாயன கடை என்பதால் தீயை கட்டுக்குள் கொண்டு வருவதில் சிரமம் ஏற்பட்டது. 3 மணி நேரம் போராட்டதுடன் தீ அணைக்கப் பட்ட நிலையில், இந்த தீவிபத்தில் ரசா யன கடை ஊழியர்கள், குடியிருப்பு வாசி கள் என 9 பேர் உயிரிழந்தனர். பலர் தீக் காயத்துடன் மீட்கப்பட்ட நிலையில், பலி எண்ணிக்கை உயரும் அபாயம் ஏற்பட் டுள்ளது.