பெண் தொழிலாளி பலி
வெம்பக்கோட்டை, ஏப்.22- வெம்பக்கோட்டை அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் பெண் தொழி லாளி ஒருவர் உயிரிழந்தார். விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே உள்ளது ஏழாயிரம்பண்ணை. இப்பகுதியைச் சேர்ந்த கேச வன்(50) என்பவருக்கு சொந்த மான பட்டாசு ஆலை மார்க் நாதபுரத்தில் செயல்பட்டு வரு கிறது. இந்த பட்டாசு ஆலை நாக்பூர் உரிமம் பெற்று சுமார் 90 அறைகளில் 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் சனிக்கிழமை யன்று வழக்கம் போல் பட்டாசு தயாரிக்கும் பணிகள் நடை பெற்று வந்தது. இதில் பட்டாசு தயாரிக்கப் பயன்படும் மூலப் பொருட்கள் வைத்திருக்கும் அறையில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. இதையடுத்து தொழிற் சாலையில் உள்ள அலுவல கத்தில் வைக்கப்பட்டிருந்த பட் டாசுகள் வெடித்துச்சிதறின. இந்தவிபத்தில் மார்க்நாத புரத்தை சேர்ந்த கணக்காள ராக பணியாற்றி வரும் ஜெய சித்ரா(24) என்ற பெண் உடல் கருகி சம்பவ இடத்திலே உயிரி ழந்தார். தகவலறிந்து விரைந்து வந்த சாத்தூர் தீயணைப்புத் துறையினர் தீயை கட்டுப் படுத்தினர். மேலும் இந்த தீ விபத்தில் தொழிலாளர்களின் 12-இருசக்கர வாகனங்களும் கருகின. இந்த குறித்து ஏழாயிரம் பண்ணை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.