states

1 முதல் 9-ஆம் வகுப்புகளுக்கு திட்டமிட்டபடி இறுதித்தேர்வு

சென்னை,ஏப்.29- தமிழ்நாட்டில் 1 முதல் 9-ஆம் வகுப்புகளுக்கு திட்டமிட்டபடி இறுதித்தேர்வு நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் மாணவர்களுக்கு  பள்ளி இறுதி தேர்வு இருக்காது என தகவல்கள் பரவி வரு கின்றன. இந்த நிலையில், தமிழகத்தில் 1 முதல் 9-ஆம்  வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு திட்டமிட்ட படி இறுதித்தேர்வு நடைபெறும் என்று பள்ளிக் கல்வித்துறை விளக்கம் அறிவித்துள்ளது. 1 முதல் 9-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் தேர்வின்றி ஆல் பாஸ் என பரவும் தகவல் தவறானது என்றும் பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.   மே 6 முதல் மே 13-ஆம் தேதிக்குள் 1 முதல் 9-ஆம்  வகுப்பு மாணவர்களுக்கு திட்டமிட்டபடி இறுதித் தேர்வு கள் நடத்தப்படும் என்றும் 9 ஆம் வகுப்பு வரை பயி லும் மாணவர்களுக்கு குறைக்கப்பட்ட பாடத் திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு கட்டாயம் ஆண்டு  இறுதித் தேர்வு நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளது.