சென்னை,ஆக.30- தமிழகத்தில் இந்துசமய அறநிலையத் துறை கட்டுப் பாட்டில் உள்ள கோவில்களுக்கு அறங்காவலர்கள் நிய மிப்பது தொடர்பான வழக்குகள், நீதிபதிகள் மகாதேவன் மற்றும் ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு புதன்கிழமையன்று விசாரணைக்கு வந்தன. இந்து சமய அறநிலையத் துறை ஆணையரும், சிறப்பு பணி அதிகாரி யும் நீதிமன்றத்தில் ஆஜராகினர். அப்போது அதிகாரிகள் கூறுகையில் , “மாநிலம் முழு வதும் 30 ஆயிரத்து 473 கோவில்களில், அறங்காவலர்களை பணிக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வசதிகள் செய் யப்பட்டுள்ளன. இதில் 4 ஆயிரத்து 313 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, 3 ஆயிரத்து 187 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். 38 மாவட்டங்களிலும் மாவட்டக்குழுக்கள் நியமிக்கப் பட்டுள்ளன. இதுதொடர்பான விவரங்கள், வியாழனன்று இணையதளங்களில் பதிவேற்றம் செய்யப்படும்” என்று தெரி வித்தனர். “மாவட்டக்குழுக்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பெரிய அளவில் பதவிப்பிரமாணம் செய்து கொள்கின்ற னர். அவர்கள் அரசியல் கட்சி சார்புள்ளவர்களாக இருக்கின்ற னர்” என்று மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதன்பின்னர் நீதிபதிகள் கூறுகையில் , மாவட்டக் குழுக்கள் நியமனம் குறித்த விவரங்களை இணைய தளத்தில் பதிவேற்றம் செய்வதுடன், அறங்காவலர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் குறித்த விவரங்களையும் இணைய தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இதன் மூலம் பொது மக்கள் ஆட்சேபம் தெரிவிக்க முடியும். மாவட்ட குழுக்களில் அரசியல்வாதிகள் நியமிக்கப்படுவதாக குற்றம் சாட்டப்படு கிறது. எனவே, மாவட்டக்குழுக்களில் அரசியல் சார்புள்ள வர்கள் நியமிக்கப்பட்டது குறித்து ஆய்வு செய்ய குழு அமைப்பது குறித்து பரிசீலிக்கப்படும். மாவட்டக்குழு உறுப்பினர்கள் பதவியேற்பு நிகழ்ச்சி நடத்துவது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது. மீறினால் அவர்களை தகுதிநீக்கம் செய்ய வேண்டும். கோவில்களில் அறங்காவலர்கள் நியமனம் தொடர்பான கால அட்டவணை யை தாக்கல் செய்ய வேண்டும்” என்று அறநிலையத் துறைக்கு உத்தரவிட்டனர்.