states

தீக்கதிர் விரைவு செய்திகள்

வீட்டின் மீது விழுந்த போர் விமானம் - 3 பேர் பலி

இந்திய விமானப் படைக்குச் சொந்தமான ‘மிக்-21’ (MiG-21) ரக போர் விமானம் ஒன்று திங்க ளன்று (மே 8) காலை வழக்கமான பயிற்சிக்காக, ராஜஸ்தான் மாநிலம் சூரத்கர் பகுதியில்  இருந்து புறப்பட்டு ஹனுமன்கர் மாவட்டத்துக்குள் நுழைந்தது. அப்போது திடீரென தொழில் நுட்பக் கோளாறு ஏற்பட்டு, விமானியின் கட்டுப்பாட்டில் இருந்து விலகிய அந்த போர் விமா னம் பலோல்நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் மீது விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் இரண்டு பெண்கள் உள்பட பொதுமக்கள் மூன்று பேர் உயிரிழந்தனர். விமானம் விழத் தொடங்கிய போதே அதிலிருந்து விமானி பாராசூட் உதவியுடன் வெளியேறி விட்டதாக விமானப்படை அதிகாரி கள் தெரிவித்துள்ளனர். விபத்து குறித்து முழுமையான விசாரணை நடத்த அதிகாரிகளுக்கு இந்திய விமானப் படை உத்தரவிட்டுள்ளது.

பேருந்தில் பயணம் செய்து வாக்கு சேகரித்த ராகுல்காந்தி!

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு மே 10 அன்று நடைபெறவுள்ள நிலை யில், திங்களன்று இறுதிக்கட்ட பிரச்சாரம் நடைபெற்றது. அப்போது, காங்கிரஸ் தலைவர்  ராகுல் காந்தி பிஎம்டிசி பேருந்தில் சுமார் 8 கி.மீ. பயணம் செய்து மாணவர்களுடன் கலந்துரை யாடினார். மேலும், லிங்கராஜ்புரம் பகுதியில் இறங்கிய அவர் தெருக்களில் நடந்து சென்றும்  பொதுமக்களுடன் கலந்துரையாடினார். முன்னதாக காலையில், கன்னிங்ஹாம் சாலையில்  உள்ள கஃபே காபி டே விற்பனை நிலையத்துக்குச் சென்ற ராகுல் காந்தி, அங்கு வாடிக்கை யாளர்கள் மத்தியிலும் வாக்கு சேகரித்தார்.

பிரதமர் மோடி ஊர்வலத்திற்கு ரூ.1.60 கோடி செலவு?

பிரதமர் நரேந்திர மோடி, கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, கடந்த 2 நாட்களாக பெங்க ளூருவில் 32 கிலோ மீட்டர் தூரத்திற்கு திறந்த காரில் ஊர்வலம் சென்றார். அவர் செல்லும் பாதை முழுவதும் இருபுறங்களிலும் பாதுகாப்புக்கு இரும்புத் தடுப்புகள் வைத்து அடைக்கப்பட்டு இருந்தது. அதற்கு மேல் காவி துணிகள் கட்டப்பட்டு, கொடிகளாக பறந்தது. இந்நிலையில்,  பிரதமர்  மோடியின் 2 நாட்கள் பிரச்சாரத்திற்கு சராசரியாக ரூ. 1.60 கோடி செலவாகி இருக்கலாம் என பாஜக  பிரமுகர் ஒருவர் தெரிவித்துள்ளார். அதாவது ஒரு கிலோ மீட்டருக்கு இரும்பு தடுப்புகள், கொடிகள்,  பூக்களுக்கு மட்டும் ரூ. 5 லட்சத்திற்கு மேல் செலவானதாகவும், ஒட்டு மொத்தமாக ரூ. 1.60 கோடி செலவாகி இருக்கலாம் என்றும் அந்த நபர் தெரிவித்துள்ளார். 

‘புல்டோசர் ஆட்சியால் உ.பி.யில் சட்டம்?-ஒழுங்கு கெட்டுவிட்டது’

“பகுஜன் சமாஜ் கட்சி உத்தரப் பிரதேசத்தில் ஆட்சியில் இருந்த போது சட்டத்தின் ஆட்சி நடந்த தால் தவறு செய்த குற்றவாளிகள், சட்டத்தின்படி தண்டிக்கப்பட்டனர். இதனால் சாமானிய மக்களுக்கும் நீதி கிடைத்தது. இப்போது அங்கு புல்டோசர், என்கவுண்ட்டர் ஆட்சி நடைபெறுகிறது என்பதால் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சி அதன் கோட்டையான உத்தரப் பிரதேசத்திலே வலுவிழந்து விட்டது எனக் கூறி வருகின்றனர். அது தவறான தகவல். மீண்டும் வாக்குச் சீட்டுகளைப் பயன்படுத்தித் தேர்தல் நடத்தினால் உ.பி.யில் காங்கிரஸும், பாஜக-வும் தோல்வி அடையும்” என்று முன்னாள் முதல்வரும், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவருமான மாயா வதி கூறியுள்ளார்.

‘2024 தேர்தலில் பாஜகவுக்கு எதிராக ஒரே வேட்பாளர்’

“உண்மையிலேயே நாம் பாஜகவை தோற்கடிக்க வேண்டும் என்று விரும்பினால், அவர்களுக்கு எதிராக ஒரே வேட்பாளர்தான் எதிர்க்கட்சிகள் சார்பில் களமிறக்கப்பட வேண்டும். காங்கிரஸ் கட்சி எங்கே வெற்றி பெறுமோ, அங்கே மற்றொருவர் போட்டியிட வேண்டாம். எங்கே இன்னொரு கட்சி வெற்றி பெறும் வாய்ப்பு உள்ளதோ அங்கே அவர்களுக்கு விட்டுத்தர வேண்டும். இதுதான் பாஜக-வைத் தோற்கடிப்பதற்கான வழி ஆகும். இதை எதிர்க்கட்சி தலை வர்கள் பரிசீலிக்க வேண்டும். இதை அவர்கள் செய்வார்கள் என்று நான் நம்புகிறேன்” என்று ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவருமான பரூக் அப்துல்லா யோசனை கூறியுள்ளார்.

கோயிலுக்கு வெளியே துலாபாரம் வழங்கிய ஆரிப் முகம்மது கான்
கேரள ஆளுநர் ஆரிப் முகம்மது கான் குருவாயூர் சென்றிருந்தார். அங்கு ‘மாடம்பு ஸ்மிருதி வர்ஷம்- 23’ என்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் குருவாயூர் கோவிலில் வழிபாடு நடத்த  விரும்புவதாக நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களிடம் கூறினார். அதைத்தொடர்ந்து அவருடைய விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் கோவிலுக்கு வெளியே நடத்தப்படும் துலாபாரம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி கோவிலின் கிழக்கு நடைபந்தலில் அவருடைய எடைக்கு எடை யாக (83 கிலோ) கதலி வாழைப்பழத்தை துலாபாரமாக வழங்கினார். இதற்கான தொகை ரூ. 4 ஆயிரத்து 250-ஐ கோவிலுக்கு செலுத்தி ரசீதும் பெற்றுக்கொண்டார்.

காங்கிரஸ் ஆட்சியை காப்பாற்றினேனா?- வசுந்தரா அலறல்

“2020-ஆம் ஆண்டு எனது ஆட்சியைக் கவிழ்க்க உள்துறை அமைச்சர்  அமித்ஷா  மற்றும் கஜேந்திர சிங் ஷெகாவத் ஆகியோர் சதி செய்தனர். இதற்காக எம்எல்ஏக்கள் சிலருக்கு பணம் விநியோகிக்கப்பட்டது. ஆனாலும் அப்போது எனது ஆட்சி காப்பாற்றப்பட்டது. இதற்கு பாஜக முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியா, முன்னாள் சபா நாயகர் கைலாஷ் மேக்வால், எம்எல்ஏ ஷோபாராணி குஷ்வா ஆகியோரே காரணம்” என்று  ராஜஸ்தான் காங்கிரஸ் முதல்வர் அசோக் கெலாட் கூறியிருந்தார். இது பரபரப்பை ஏற்படுத்தி யிருந்த நிலையில், “கெலாட் ஆட்சியைக் காப்பாற்ற நான் உதவி செய்ததாக கூறுவது பொய். ராஜஸ்தானில் நடந்த குதிரை பேரத்திற்கு பின்னணியில் அசோக் கெலாட்டே இருந்தார். அவர்தான் இதற்கு மூளையாக செயல்பட்டார். பாஜக ஒருபோதும் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டதில்லை, இனியும் ஈடுபடப் போவதும் இல்லை” என்று வசுந்தரா ராஜே சிந்தியா தெரிவித்துள்ளார்.

சித்தராமையாவும், டி.கே.சிவகுமாரும் திப்புவின் குடும்ப உறுப்பினர்களாம்

“நான் அசாமில் இருந்து வருகிறேன். அசாமில் 17 முறை முகலாயர்கள் எங்களை தாக்கி னர். ஆனால் முகலாயர்களால் எங்களை தோற்கடிக்க முடியவில்லை. கர்நாடகத்தின் குடகு மக்களும் திப்பு சுல்தானை பல முறை தோற்கடித்தனர். 80 ஆயிரம் பேர் தங்கள் வாழ்க்கை யை தியாகம் செய்தனர். இன்றோ சித்தராமையா திப்பு சுல்தான் ஜெயந்தியை கொண்டாடுவோம் என்று கூறுகிறார். அவர்கள் திப்பு சுல்தான் ஜெயந்தியை கொண்டாட விரும்பினால் அதை பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தில் கொண்டாட வேண்டும். ஆனால் இந்தியாவில் இதைச் செய்ய  உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை” என்று அசாம் பாஜக முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா  மதவெறியைத் தூண்டியுள்ளார்.

பல்வீர்சிங் மீது  நான்காவது வழக்குப்பதிவு கல்லிடைக்குறிச்சி ஆய்வாளர் பெயரும் சேர்ப்பு

திருநெல்வேலி, மே 8- நெல்லை மாவட்டம் அம்பை போலீஸ் உட்கோட்டத்திற்கு உட்பட்ட காவல் நிலையங்களில் விசாரணைக்கு அழைத்து செல்  லப்பட்டவர்களின் பற்களை பிடுங்கியதாக எழுந்த புகாரில்  உதவி காவல் கண்காணிப்பாளர் (ஏஎஸ்பி) பல்வீர்சிங் மீது ஏற்க னவே சி.பி.சி.ஐ.டி. போலீசார்  3 வழக்குகள் பதிவு செய்துள்ள னர். இந்த வழக்குகளில் வி.கே. புரம் காவல் துணை ஆய்வாளர்  முருகேசன், தனிப்பிரிவு காவலர் போகன் குமார் மற்றும் 2 போலீ சார் மீது வழக்குகள் பதிவு செய்  யப்பட்டுள்ள நிலையில் தற்போது  4-ஆவது வழக்கு ஒன்றை சி.பி. சி.ஐ.டி. போலீசார் பதிவு செய்துள்  ளனர். கல்லிடைக்குறிச்சி அருகே ஜமீன் சிங்கம்பட்டியை சேர்ந்த  சூர்யா என்பவர் கொடுத்த புகா ரின் பேரில் தற்போது உதவி காவல் கண்காணிப்பாளர் பல்  வீர்சிங் மீது 4-ஆவது வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது.  மேலும் இந்த வழக்கில் சம்பவம் நடந்த காலகட்டத்தில் கல்லிடைக்குறிச்சி காவல் ஆய் வாளராகஇருந்த ராஜகுமாரி, அங்கு பணியாற்றும் காவலர்கள் ராமலிங்கம், ஜோசப் ஆகியோர் மீது 5 பிரிவுகளில் சி.பி.சி.ஐ.டி.  ஆய்வாளர் உலகராணி வழக் குப்பதிவு செய்துள்ளார்.

எஸ்.எஸ்.எல்.சி.,  11 ஆம் வகுப்பு  தேர்வு முடிவு மே 19 இல் வெளியாகிறது

சென்னை, மே 8- தமிழ்நாட்டில், 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவு வெளியானதை தொடர்ந்து 10, 11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளை வெளியிடவும் தேர்வுத்துறை தயாராகவுள்ளது. 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இம்மாதம் 17 ஆம் தேதியும், 11 ஆம்  வகுப்பு தேர்வு முடிவு 19 ஆம் தேதியும்  வெளியிடப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், 10, 11 ஆம் வகுப்பு  தேர்வு முடிவுகள் ஒரே நாளில் வெளி யிடப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யா மொழி தெரிவித்தார்.  வருகிற 19 ஆம் தேதி (வெள்ளிக் கிழமை) காலையில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. 12 ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி  பெறாத மாணவர்களுக்கு உடனடி தேர்வு ஜூன் 19 ஆம் தேதி நடத்தப்படும்  என்றும் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற  மாணவர்கள் உயர்க் கல்வி பெற உயர்க் கல்வி வழிகாட்டி குழுவும் அமைக்கப்பட்டுள்ளது என்றும் தாங்கள் படித்த பள்ளிகளில் மாண வர்கள் மற்றும் பெற்றோருக்கு இக்குழு  ஆலோசனை வழங்கும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

 பர்மா இந்தியர்களுக்கான  நிலத்தில் ஆக்கிரமிப்பை அகற்ற அவகாசம்

சென்னை, மே 8- பர்மாவில் இருந்து தாயகம் திரும்பியவர்கள் மறுவாழ்வுக்காக 1968 ஆம் ஆண்டு பர்மா இந்தி யர்கள் கூட்டுறவு வீட்டு வசதி சங்கம்  துவங்கப்பட்டது. இந்த சங்கத்தின்  சார்பில் சென்னை பாலவாக்கத்தில் சுமார் 25 ஏக்கர் நிலம் வாங்கப் பட்டு, அதில் 318 வீட்டுமனைகள் உருவாக்கி, சங்க உறுப்பினர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்நிலையில், இந்த நிலத்தை  சிலர் சட்டவிரோதமாக ஆக்கிரமித்  துள்ளதாக கூறி, சங்கத்தின் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், ஆக்கிரமிப்பாளர்களை அப்புறப் படுத்தும்படி, தாம்பரம் வட்டாட்சி யருக்கு, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்த வழக்குகளை உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் தள்ளுபடி செய்த நிலையில், மாவட்ட ஆட்சியர், உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்ற உத்தரவுகளை அமல்படுத்தி ஆக்கிர மிப்பாளர்களை அப்புறப்படுத்தக் கோரி, பர்மா இந்தியர்கள் கூட்டுறவு  வீட்டு வசதி சங்கம் சார்பில் அதன் தலைவர் ஏ.போஸ் சென்னை உயர்  நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு, பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசுத் தரப்பில், “குறிப்பிட்ட அந்த நிலத் தில் வசிக்கும் சுமார் 300 ஆக்கிரமிப் பாளர்களை அகற்ற அவகாசம் வழங்க வேண்டும்” என கோரிக்கை விடுக்கப்பட்டது. அரசுத் தரப்பு கோரிக்கையை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், பர்மா இந்தியர்கள் கூட்டுறவு வீட்டு வசதி சங்கத்துக்கு சொந்தமான நிலத்தில் வசிக்கும் 300 ஆக்கிரமிப்பாளர்களை அப்புறப்படுத்தி, நிலத்தை சங்கத்தின் வசம் ஒப்படைக்க தமிழ்நாடு அரசுக்கு ஆறு மாத கால அவகாசம் வழங்கி உத்தரவிட்டனர். 

காற்றழுத்த தாழ்வு பகுதி   மீனவர்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

சென்னை, மே 8- தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் காற்ற ழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ள தாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளி யிட்டுள்ள அறிக்கை வருமாறு:- தமிழ்நாட்டின் வட கடலோரப் பகுதிகளின் மேல் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவு கிறது. தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் ஒரு  காற்றழுத்த தாழ்வு பகுதி திங்க ளன்று (மே 8) காலை உருவாகி யுள்ளது.  இது 9 ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று 10 ஆம் தேதி தென்கிழக்கு அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக் கடல் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் புயலாக வலு பெறக்கூடும். இது வடக்கு-வட மேற்கு திசையில் நகர்ந்து மத்திய  கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் 11 ஆம் தேதி வாக்கில் நிலவக் கூடும். அதன் பிறகு வடக்கு-வட  கிழக்கு திசையில் திரும்பி வங்க தேசம் - மியன்மார் கடற்கரை நோக்கி நகரக்கூடும். இதன் காரணமாக  தமிழ்நாடு,  புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மே 9 முதல் 11 வரை  ஒருசில இடங்களில் இடி மின்ன லுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம்,  தென்காசி, விருதுநகர், மதுரை  மற்றும் சிவகங்கை மாவட்டங்க ளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள், அந்தமான் நிக்கோபர் தீவுகள் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 50  முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தி லும் இடையிடையே 70 கிலோ  மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். எனவே, மீனவர்கள் இப்பகுதி களுக்கு செல்ல வேண்டாம். இவ்வாறு தெரிவிக்கப்பட் டுள்ளது.

அமெரிக்க மிரட்டலை மீறி அரபு லீக்கில் சிரியா

கெய்ரோ, மே 8- சிரியாவை மீண்டும் அரபு லீக்கில் சேர்க்கக்கூடாது என்ற அமெரிக்காவின் மிரட்டல்களை மீறி பெரும்பாலான அரபு  நாடுகள் சிரியாவுக்கு ஆதரவளித்துள்ளன.  2011 ஆம் ஆண்டில் உள்நாட்டுப் போரால் சிரியா பாதிக்கப்பட்டது. தற்போதைய ஜனாதிபதி பஷர் அல் அஸ்ஸாத் தங்களின் பொம்மையாக இருக்க மறுத்ததால், தீவிரவாதிகள் வெற்றி பெறட்டும் என்று அமெரிக்கா விரும்பியது. தீவிரவாதிகளின் ஒரு பிரிவினருக்கு ஆதரவும், ஆயுதங்களும் தந்தது. அதோடு, அரபு லீக்கில் இருந்து சிரியாவை வெளியேற்றுமாறு அரபு நாடு களுக்கு அழுத்தமும் தந்தது. சிரியாவும் வெளியேற்றப்பட்டது. உள்நாட்டை வெற்றிகரமாக எதிர்கொண்ட சிரியா, அரபு நாடுகளு டன் தனது உறவை புதுப்பித்து வந்தது.  ரஷ்யா, சீனா மற்றும் ஈரான் ஆகிய நாடு களுடனான உறவு புதிய வளர்ச்சியைத் தந்தது. இந்நிலையில் அரபு லீக்கில் மீண்டும் சிரியாவை இணைக்குமாறு லெபனான் வேண்டுகோள் வைத்தது. 22 உறுப்பு நாடுகளைக் கொண்ட அரபு லீக், எகிப்து தலைநகர் கெய்ரோவில் தனது உச்சி மாநாட்டை நடத்தி வருகிறது. அதில் லெபனானின் வேண்டுகோள் ஏற்றுக் கொள்ளப்பட்டு, மீண்டும் சிரியா அரபு லீக்கில் இணைந்திருக்கிறது. முழு உறுப்பு நாடாக ஏற்றுக் கொண்டா லும், சிரியா சில நிபந்தனைகளை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று எகிப்து உள்ளிட்ட சில நாடுகள் கருத்து தெரி வித்தன. அகதிகளுக்கு மறுவாழ்வு அளிப்பது உள்ளிட்ட பல்வேறு பிரச்சனை கள் எழுப்பப்பட்டன. லெபனான் உள்ளிட்ட  நாடுகள் சிரியா திரும்புவதை முழுமை யாக ஆதரிக்கின்றன. அரசியல் மட்டு மில்லாமல், பொருளாதார ரீதியான பலன்களை அரபு லீக் அனுபவிக்கும் என்று லெபனான் தெரிவித்துள்ளது.

சஞ்சய் குமார் மிஸ்ராவுக்கு இனிமேல் பதவி நீட்டிப்பு தரமாட்டார்களாம்!

எல்லாம் முடிந்த பிறகு உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய அரசு வேஷம்

புதுதில்லி, மே 8 - அமலாக்கத் துறை இயக்குநர் சஞ்சய் குமார் மிஸ்ராவுக்கு, இனி மேற் கொண்டு பதவி நீட்டிப்பு வழங்க மாட்டோம் என்று உச்ச நீதிமன்றத்தில் மோடி அரசு தெரிவித்துள்ளது. அமலாக்கப்பிரிவு இயக்குநராக முதல் முறையாக 2018, நவம்பா் 19  அன்று இரண்டு ஆண்டுகளுக்கு சஞ்சய்குமார் மிஸ்ரா நியமிக்கப் பட்டார். 2020-இல் அவரது முந்தைய  இரண்டு ஆண்டுகள் பணி நியமன  உத்தரவு திடீரென மூன்று ஆண்டு களாக நீட்டிக்கப்பட்டது. இதனைக் கண்டித்த உச்சநீதிமன்றம், இதற்கு மேலும் சஞ்சய் குமார் மிஸ்ராவுக்கு பணி நீட்டிப்பு வழங்கக் கூடாது என்று  கூறியிருந்தது. சஞ்சய் குமார் மிஸ்ரா வின் பதவிக்காலம் 2021 நவம்பர் 17 அன்றோடு முடிவடைவதால், உச்ச நீதிமன்ற உத்தரவின்படி அவருக்கு பணிநீட்டிப்பு வழங்கப்படாது என்று கருதப்பட்டது.  ஆனால், மிஸ்ரா பதவிக் காலம் முடிவதற்கு ஒரு வாரத்திற்கு முன்ன தாக திடீரென, 2 ஆண்டுகளாக உள்ள  சிபிஐ, அமலாக்க பிரிவு இயக்குநர் களின் பதவிக்காலத்தை மோடி அரசு 5  ஆண்டுகளாக உயர்த்தியது. அதற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலையும் பெற்றது.  அதாவது சஞ்சய் குமார் மிஸ்ரா வை தக்க வைப்பதற்காகவும், அதே நேரம் உச்சநீதிமன்றத்தின் கண்டனத்தி லிருந்து தப்பிப்பதற்காகவும், பதவிக்காலத்தையே 5 ஆண்டுகளாக உயர்த்தி மோடி அரசு சட்டம் கொண்டு வந்தது. இதுவும் கண்டனங்களுக்கு உள்ளானது.  இதனிடையே, எஸ்.கே. மிஸ்ரா வுக்கு வழங்கப்பட்ட பதவி நீட்டிப்பை  எதிர்த்து, காங்கிரஸ் செய்தித் தொடர் பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, சமூக  ஆர்வலரும், மத்தியப் பிரதேச மகளிர்  காங்கிரஸ் கமிட்டியின் பொதுச்செய லாளருமான டாக்டர் ஜெயா தாக்கூர், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி மஹூவா  மொய்த்ரா ஆகியோர் உச்சநீதி மன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த வழக்கை நீதிபதி பி.ஆர்.  கவாய் தலைமையில்,

நீதிபதிகள் விக்ரம்நாத், சஞ்சய் கரோல் ஆகி யோர் அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது. சில நாட்களுக்கு முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, “அமலாக்கத்துறை இயக்குநர் சஞ்சய் குமார் மிஸ்ராவுக்கு மேலும் நீட்டிப்பு வழங்கப்படக்கூடாது என்ற  உத்தரவு இருந்தபோதிலும் அவருக்கு 3-ஆவது முறையாக பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டது எப்படி? ஒரு குறிப்பிட்ட நபரின் பதவிக் காலத்தை மீண்டும் மீண்டும் நீட்டிப்பதன் காரணம் என்ன? அந்த ஒரு நபரால் மட்டுமே அந்த பதவிக் குரிய கடமையை செய்ய முடியுமா? அமலாக்கத்துறையில் அவரது வேலையைச் செய்யக்கூடிய வேறு  ஆள் இல்லையா? சஞ்சய் குமார்  மிஸ்ரா மட்டும் இவ்வளவு இன்றியமை யாதவராக ஏன் இருக்கிறார்? அப்படி யானால் அவர் ஓய்வுபெற்ற பிறகு அந்த பதவியின் நிலை என்னாகும்?” என நீதிபதிகள் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர். இந்நிலையில், திங்களன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில், “அமலாக்கத்துறை இயக்குநராக இருக்கும் சஞ்சய் மிஸ்ராவின் பதவிக் காலம் வரும்  நவம்பர் மாதத்தோடு முடிவடைகிறது. அதன் பிறகு அவரது பதவிக் காலம் நீட்டிக்கப்பட மாட்டாது” என ஒன்றிய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.