states

மீன் வள வங்கி அமைக்க மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பு கோரிக்கை

சென்னை,நவ.19- மீனவர்களின்  வாழ்வாதா ரத்திற்கு  பயன்  அளிக்கும்  வகை யில்  மீன்வள  வங்கி  அமைக்க வேண்டும் என்று தமிழ்நாடு  மீன்பிடி  தொழிற்சங்க  கூட்டமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது. இதுகுறித்து கூட்டமைப்பின் சார்பில் தலைவர் செலஸ்டின் பொதுச்செயலாளர் எஸ்.அந்தோணி ஆகியோர்   தமிழக முதலமைச்சருக்கு அனுப்பியுள்ள கடிதம் வருமாறு: தமிழ்நாட்டில்    மீனவர்களின்    வாழ்வாதார    மேம்பாட்டுக்கான    தேவைகளில்   மிகவும் முக்கிய மான கோரிக்கையாக மீன்வள வங்கியை ஏற்படுத்த வேண்டும் என்பதாகும். இதை புரிந்து கொண்டு திமுக தேர்தல் அறிக்கை யிலும் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் மீன்வள வங்கியை அமைத்து மீனவர்களின்  பொரு ளாதாரத்திற்கு  துணை  நிற்போம்  என  வாக்குறுதி  அளித்தது. இது  மீனவர்களிடம் பெரும் வர வேற்பை பெற்றது.  தாங்கள்  முதலமைச்சராக  பதவி  ஏற்ற  பிறகு  சட்ட மன்றத்திலும்   மீன்வள  வங்கி  அமைப்பது தொடர்பாக அறி விப்பு  வெளியிடப்பட்டது.  தமிழ்நாடு  மீன்பிடி  தொழிற்சங்க  கூட்டமைப்பு  (சிஐடியு) உள்ளிட்ட மீனவர்  அமைப்புகள்  மற்றும்  மீனவர்கள்  அரசின்  இந்த  அறிவிப்பை  வரவேற்றதோடு உடனடியாக மீன்வள வங்கி அமைக்கப்பட வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இச்சூழ்நிலையில் கடந்த 8 ஆம் தேதி தூத்துக்குடி   ஆய்வு கூட்டத்தில்    மீன்வளத்துறை அமைச்சர் முன்னிலையில் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர்    கனிமொழி    கலந்து  கொண்டு  தூத்துக்குடி  மீனவர்  கூட்டுறவு வங்கி  என்ற  பெயரில்  துவக்க நிகழ்ச்சி  நடை பெற்றதாக   பத்திரிகை  செய்தி வெளிவந்தது.  இவ்வாறு தூத்துக்குடியில்  மீனவர்  கூட்டுறவு  வங்கி  ஆரம்பித்த தையும்,  இதர கடலோர மாவட்டங்களிலும் அமைக்க போவதாக அறிவித்ததையும் வர வேற்கிறோம்.

தூத்துக்குடியில் ஆரம் பித்துள்ள வங்கியும், தொடர்ந்து அமைக்கவிருக்கிற வங்கிகளும் இந்திய வங்கிகள் சட்டத்தின் கீழ் ரிசர்வ்  வங்கி  விதிமுறை களுக்கு  உட்பட்டு  அவை களின்  அனுமதியோடு உரு வாக்கப்பட்டுள்ளதா என்பதை அறிய மீனவர்களாகிய நாங்கள் விரும்புகிறோம். அவ்வாறு    நடைமுறைப்படுத்து வதற்கு    மீனவர்களின்    பிரதி நிதியாக    உள்ள    மீனவர் தொழிற் சங்கங்களின்  பிரதிநிதிகளையும் உள்ளடக்கிய   கூட்டத்தை  கூட்டி  ஆலோசனைகள்  பெற்று முடிவு எடுத்திருக்க வேண்டும் என சுட்டிக்காட்ட விரும்புகிறோம். கடற்கரை பகுதி மீனவர்களுக்கும், தமிழகத்தின் அனைத்து மாவட் டங்களிலும் உள்ள உள்நாட்டு மீனவர்களுக்கும்   பயன்படும் வகையில்  அனைத்து பணப்பட்டு வாடா மற்றும்   சேமிப்புகள்   சம்பந்த பட்ட அனைத்து நடை முறை களும்  இதர அங்கீ கரிக்கப்பட்ட வங்கிகள்    போல் செயல் பட்டால்தான்  மீனவர்களின் பொரு ளாதார மேம்பாட்டிற்கு உதவும். எனவே, தாங்கள் சட்ட மன்றத்தில் அறிவித்ததை போல்  மீன்வள வங்கியை அமைத்து செயல்படுத்த  அனைத்து மீனவர்களின்  சார்பாக  தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பு (சிஐடியு) சார்பில் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.