states

img

காவிரி நீரை தர மறுக்கும் கர்நாடகா அரசை கண்டித்து குறைதீர் கூட்டத்திலிருந்து விவசாயிகள் வெளிநடப்பு

தஞ்சாவூர், ஆக.30 -  காவிரி நீரை தர மறுக்கும் கர்நாடகா  அரசையும், காவிரி மேலாண்மை ஆணையத் தலைவரையும் கண்டித்து,  குறைதீர் கூட்டத்தில் இருந்து விவசாயி கள் வெளிநடப்பு செய்து  போராட்டத் தில் ஈடுபட்டனர்.   தஞ்சாவூர், ஆட்சியர் அலுவல கத்தில் புதன்கிழமை விவசாயிகள் குறைதீர் கூட்டம், ஆட்சியர் தீபக் ஜேக்கப் தலைமையில் நடந்தது.  கூட்டம் துவங்கியதும், காவிரி நீர்  பிரச்சனை தொடர்பாக கர்நாடகா அரசையும், காவிரி மேலாண்மை ஆணையத் தலைவர் ஹல்தரை நீக்கக்  கோரியும், தண்ணீரின்றி பாதிக்கப் பட்ட பயிர்களுக்கு ஏக்கருக்கு 35 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வலியு றுத்தியும் விவசாயிகள் வெளிநடப்பு செய்தனர். தொடர்ந்து, ஆட்சியர் அலுவலக வளாகத்தில், போராட்டத் தில் ஈடுபட்டு முழக்கங்கள் எழுப்பினர்.  பின்னர், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் என்.வி. கண்ணன் செய்தியாளர்களிடம் கூறு கையில், “டெல்டாவில் குறுவை சாகு படி செய்துள்ள விவசாயிகளின் நிலங்கள், தண்ணீரின்றி வறண்டு போய் வெடித்து காட்சியளிக்கிறது. விவசாயி கள் வாழ்வா, சாவா என்ற நிலையில்  உள்ளனர்.

காவிரி ஆணைய கூட்டத்தில்,  கர்நாடகா அரசு சார்பில் பிரதிநிதி கள்கூட கலந்து கொள்ளவில்லை. டெல்டா விவசாயிகள் பற்றி தமிழக  அரசும் கண்டுகொள்ளாமல் இருக்கிறது. காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத் தில், வினாடிக்கு 5,000 கனஅடி நீரை திறக்க வேண்டும் என கர்நாடக அரசுக்கு  உத்தரவிடுவர். ஆனால், அதற்கும் கர்நாடக அரசு மறுத்து விட்டது. காவிரி  ஆணையம் ஒன்றிய அரசு, உச்சநீதி மன்றம் சொன்ன விஷயங்களை நிறை வேற்றவில்லை. கர்நாடகாவில் தண்ணீர் உள்ள போதிலும் கொடுக்க மறுக்கிறது. இந்த வெளிநடப்பு விவ சாயிகளின் முதற்கட்ட போராட்டம்.  தண்ணீர் கிடைக்கும் வரை விவ சாயிகளின் போராட்டம் அடுத்த கட்டத்தை நோக்கி செல்லும். தமிழக அரசிடம் பயிர் காப்பீடு கேட்டோம். ஆனால் பயிர் காப்பீடு இல்லை. இருப் பினும், பாதிக்கப்பட்ட விவசாயி களுக்கு ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும்” என்றார். பானைகளுடன் காவடி விவசாய சங்கங்களின் கூட்டு இயக்க மாநிலத் துணைத் தலைவர் கக்கரை சுகுமாரன் தலைமையில் விவ சாயிகள், குறுவை பயிரைக் காப்பாற்ற,  காவிரி நீர் கோரி, பானைகளை காவடி யாக சுமந்து வந்து, ஆட்சியரிடம் மனு  அளித்தனர். பின்னர், காவிரி நீர் பெற்றுத் தராத ஒன்றிய மற்றும் தமிழக  அரசைக் கண்டித்து, பானைகளை உடைத்து போராட்டம் நடத்தினர்.