states

பயிர்களின் பாதிப்புக்கேற்ப நிவாரணம் வழங்கிடுக! பயிர்க்காப்பீட்டுத் தொகை உடனே கிடைக்க வழிசெய்திடுக!

சென்னை, பிப்.7-  காவிரி டெல்டா மாவட்டங்களில் கன மழையால்  ஏற்பட்ட பயிர்களின் பாதிப்புக்  கேற்ப நிவாரணம் வழங்க வேண்டும். நெற்பயிர்களுக்கு நிவாரணத்தை அதி கரிக்க வேண்டும். விவசாயிகளுக்கு பயிர்க்காப்பீட்டுத் தொகை உடனே கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு விவசாயி கள் சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலா ளர் சாமி.நடராஜன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:  காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தின் ஒரு பகுதியில் பருவம்  தவறி பிப்ரவரி மாதம் பெய்த கனமழை  காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த சம்பா நெற்பயிர்கள் சாய்ந்து  பல பகுதிகளில் தண்ணீரில் மூழ்கின.  பாதிக்கப்பட்ட பகுதிகளை உடனே  பார்வையிட்டு கணக்கெடுப்புப்பணி களை போர்க்கால அடிப்படையில் செய் திட வேண்டும். அறுவடைக்கு தயாராக இருந்த நெற்கதிர்கள் முழுமையாக பாதிக்கப்பட்டிருந்தால் ஏக்கருக்கு ரூ. 35 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும். ஏனைய பயிர்களான உளுந்து, பயிறு,  எள், நிலக்கடலை ஆகிய பயிர்களுக்கு பாதிப்புக்கு ஏற்றாற்போல் இழப்பீட்டை தமிழ்நாடு அரசு அறிவிக்க வேண்டு மென தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் கோரியிருந்தோம்.

தமிழ்நாடு முதலமைச்சரின் உத்த ரவை ஏற்று வருவாய்த்துறை, வேளா ண்மைத்துறை அதிகாரிகள், பாதிக்கப் பட்ட பகுதிகளில் உடனடியாக கணக்கெ டுப்பு பணிகளை மேற்கொண்டனர். மேலும் பிப்ரவரி 5 அன்று வேளாண்மை துறை அமைச்சர், உணவுத்துறை அமைச்சர் பாதிக்கப்பட்ட மாவட்டங்க ளில் பார்வையிட்டு விவசாயிகளை சந்தித்து கோரிக்கை மனுக்களை அமைச்சர்கள் பெற்றனர். அதிகாரி களின் கணக்கெடுப்புப்படி ஏறத்தாழ  2.17 லட்சம் ஏக்கரில் பயிர்கள் பாதிக் கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது, உடனடியாக போர்க்கால அடிப்படை யில் கணக்கெடுப்பு பணியை மேற் கொண்டதை தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் வரவேற்கிறோம். அதே நேரத்தில், முதல்வர் அறி வித்துள்ள பயிர் இழப்பு நிவாரணம் 33 சதவீதத்திற்கு மேல் பாதிக்கப்பட்ட நெற்பயிருக்கு ஒரு ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் என்பது ஏற்புடைய தில்லை. கடந்த காலத்தை விட சற்று  கூடுதலாக அறிவித்திருந்த போதிலும்,

ஒரு ஏக்கர் நெல் சாகுபடி செய்ய அரசு ரூ.35,900 கடனாக வழங்குகிறது. ஏறக்குறைய ரூ.37 ஆயிரம் செலவு செய்து விளைவித்த நெற்பயிர் முற்றி லும் அழிந்து போனால் ஏக்கருக்கு 8 ஆயிரம் ரூபாய் மட்டும் நிவாரணம் அறி விப்பது சரியா என்பதை அரசு மறுபரி சீலனை செய்ய வேண்டுகிறோம். 33 சத வீதத்திற்கு கீழ் பாதிக்கப்பட்ட நெற்பயிர் களுக்கு பாதிப்பிற்கு ஏற்ப நிவாரணம் வழங்க வேண்டும். மேலும், பயிர்க்காப்பீடு செய்த விவ சாயிகளுக்கும் இப்போது நடைமுறை யில் உள்ள பயிர்க் காப்பீட்டு திட்டப்படி உரிய இழப்பீடு கிடைப்பதில்லை. எனவே, தமிழ்நாடு அரசு நெற்பயிர் பாதிப்பிற்கு அறிவித்துள்ள நிவார ணத்தையும், பாதிக்கப்பட்ட ஏனைய பயிர்களுக்கு நிவாரணத்தை உயர்த்தி அறிவிக்க வேண்டுகிறோம். பயிர்க்காப்பீட்டுத் தொகை உடனடியாக விவசாயிகளுக்கு கிடைக்கும் வகையில் பயிர்க்காப்பீட்டு நிறுவனங்களை தமிழ் நாடு அரசு வற்புறுத்த வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.