states

ஜூனியர் விகடன் மீது பொய்வழக்கு: டி.யூ.ஜெ கண்டனம்

சென்னை, மே 23- ஜூனியர் விகடன் வார இதழ் மீது பொய் வழக்குப் பதிவு செய்துள்ள காவல் துறையின் நடவடிக்கைக்கு, கடும் கண்டனம் தெரிவித்துள்ள டி.யூ.ஜெ, இப்பிரச்சினையில், தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது. இது குறித்து, சங்கத் தலைவர் பி.எஸ்.டி.புருஷோ த்தமன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- “ஜி ஸ்கொயர்”என்கிற தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனம் சார்பில், புருஷோத்தமன் குமார் என்பவர் சென்னை மயிலா ப்பூர் காவல் நிலையத்தில் கவின் என்கிற தனிநபர் மீது கடந்த, 21.5.2002 அன்று புகார் ஒன்றை அளிக்கிறார். ‘ஜி ஸ்கொயர்’ ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநர் ராமஜெயம் என்கிற ‘பாலா’ என்பவரை, அலைபேசி வழியாக தொடர்பு கொண்டு 50 லட்சம் ரூபாய் பணம் கொடுக்கவில்லை என்றால், ஜூனியர் விகடன் மற்றும் யூடியூப் போன்ற டிஜிட்டல் மீடியாக் களில் தவறான செய்திகளை வெளியிட செய்வேன் என்றும் பார்த்தால் அடையாளம் காட்டக்கூடிய ஒருவர் ஜி ஸ்கொயர் அலுவலகத்திற்கு நேரில் வந்து மிரட்டியதாகவும்,  கடந்த மே 5 ஆம் தேதி அளித்த புகாரில் தெரிவித்துள்ளார். மேலும், இந்த புகாரில் ஜூனியர் விகடன் நிறுவனத்தின் இயக்கு நர்கள் மூவர் மற்றும் யு டீயூபர்கள், சவுக்கு சங்கர், மாரிதாஸ் ஆகியோர் பெயர்களும் குறிப்பிட்டப்பட்டுள்ளது. காவல்துறையில் புகார் கொடுத்துள்ள ஜி ஸ்கொயர் நிறுவனம் தங்களைப் பற்றிய செய்தி வெளியிட்டதற்காக ஜூனியர் விகடனுக்கு வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ்  அனுப்பியுள்ளது. அதற்கு விகடன் நிறுவனமும் பதில ளித்திருக்கிறது. இந்த நிலையில் அதே குற்றச்சாட்டின் உள்ளடக்கத்தை மாற்றி கொஞ்சம் கூடுதலாக புகாரைச் சேர்த்து,

காவல் துறையிடம் வழங்கியுள்ளனர். புகாரின் உண்மையை முழுமையாக விசாரிக்காமல் வேகவேகமாக ஜூனியர் விகடன் நிறுவன இயக்குநர்கள் மற்றும் ஊடகவிய லாளர்கள்  மீது  காவல்துறை வழக்குப் பதிவு செய்தி ருப்பது இதன் பின்னணி குறித்து கேள்விகளை எழுப்பு கிறது. பத்திரிகை மற்றும் ஊடகங்களை மிரட்டும் காவல் துறையின் இத்தகைய போக்கு கண்டனத்திற்கு உரிய தாகும். மேலும், இரவு 9 மணிக்கு ஜி ஸ்கொயர் நிறுவனத் திடம் புகார் பெறப்பட்டு, இரவு 2 மணிக்கு வழக்குப் பதிவு செய்து கவின் என்பவரை நள்ளிரவில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த புகாரில், 3 வது குற்றவாளியாக முதல் தகவல் அறிக்கையில், சேர்க்கப்பட்டுள்ள “ஜூனியர் விகடனோடு சம்பந்தப்பட்டவர்கள்”. ஆகவே, விகடன் குழுமத்தின் உரிமையாளர் முதல் அந்த அலுவலகத்தின் ஓட்டுனர் வரைக்கும் கைது செய்யலாம் என்கிற காவல்துறையின் நோக்கமாகும் இது. ஊடகவியலாளர்களை அச்சுறுத்தும் வகையில் பொய் வழக்குகள் பதிவு செய்துள்ள காவல்துறை அதிகா ரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பொய்வழக் குகளை திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்து கிறோம் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.ஜூனியர் விகடன் மீது பொய் வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறைக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் சார்பிலும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.