‘புரட்சிகர முயற்சிகளே புரட்சிகர சமூகங்களைக் கட்டியெழுப்புகின்றன’
ஆளும் வர்க்கத்தின் அநீதியை எதிர்க்கும் ஒவ்வொரு போராட்டமும் அத்த கைய முயற்சிகள்தாம். உலகமே வியந்து நோக்கிய இந்திய விவசாயிகளின் போராட்டமும் அத்தகைய புரட்சிகரச் செயல்பாடே. விவசாயிகளின் போராட்டங்களுக்குத் தொழிலாளி வர்க்கம் அளித்த ஆதரவும் வெகுமக்களின் உள்ளார்ந்த பங்களிப்பும் வெற்றியைச் சாத்தியப்படுத்தின. அதைத் தொடர்ந்து விரிவான தொழிலாளி - விவசாயி ஒற்றுமைக்கான தளத்தையும் அது அளித்தது. விவசாயிகளுக்கு எதிரான மூன்று மசோதாக்களை எதிர்த்த இப்போராட்டம் நாடு முழுவதும் பரந்து விரிந்துள்ள விவசாயி களின் மிகப் பரவலான நடவடிக்கையாகும். விவ சாயிகளுடன் தொழிலாளர் வர்க்கத்தின் தீவிர ஒற்றுமையின் தனித்துவமான நிகழ்வாகவும் இது இருந்தது. இத்தகைய போராட்டங்களையும் அதன் தொடர் விளைவுகளையும் தான் ‘புரட்சி யின் அரசியல் வெளிப்பாடு’ என்கிறார் மார்க்ஸ்.
நம்பிக்கையை விதைத்தல்
தோற்றுப்போன பழைய முயற்சிகளைத் தொடர்வதால் வெற்றிகள் சாத்தியமாவ தில்லை. ஏனெனில், வரலாறு என்பது தேங்கிக் கிடப்பதல்ல. கால ஓட்டத்தின் அனுபவங்கள் அனைத்தையும் படிப்பினைகளாகக் கொண்டு அது முன்னேறுகிறது. வரலாற்றின் இயக்கப் போக்கில் பழைய முயற்சிகள் காலாவதியாகி விடுகின்றன. மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறும்வரை நடைபெற்ற ஓராண்டு காலத் தொடர் போராட்டம் என்பது பழைய முயற்சி களைக் கடந்த புதிய முன்னெடுப்பாகும். ராஜஸ் தானிலும், மகாராஷ்டிராவிலும் அதற்கு முன்ன தாக நடந்த விவசாயிகளின் நெடும்பயணங்கள் கொடுத்த அனுபவங்களும் படிப்பினைகளும் அதற்கான அடித்தளமாக அமைந்தன. இத்த கைய போராட்டங்களும் வெற்றிகளும் மக்கள் மத்தியில் நம்பிக்கையை விதைக்கின்றன. போராட்டங்களை ஒடுக்குவதும் மக்களின் எழுச்சி யை மறைத்து மக்களிடையே அவ நம்பிக்கை யை விதைப்பதுமே எல்லாக் காலத்திலும் ஆளும் வர்க்கத்தின் வேலையாகும். ‘நாங்கள் எதார்த்தவாதிகள். ஆகவே, அசாத்தியங்களைக் கனவு காண்கிறோம்’ என்பது நம்பிக்கையூட்டும் சேகுவேராவின் புகழ்பெற்ற பொன்மொழியாகும். எதார்த்த வாதிகள் எதார்த்தத்தைத்தானே கனவு காண வேண்டும்; சாத்தியமற்ற அசாத்தியங் களைக் கனவு காண்பவர்கள் எப்படி எதார்த்த வாதிகளாக இருக்க முடியும்? உண்மையில் இவ்வாக்கியம் மிகுந்த பொருள் பொதிந்தது.
ஆளும் வர்க்க கருத்து நிலை
அதீத உழைப்புச் சுரண்டலின் விளைவாக உழைக்கும் மக்களை உடலளவில் முத லாளித்துவம் சிதைப்பதை நாம் அறிவோம். அதேநேரம் அவர்களின் சிந்தனையைச் சிதைக்கும் வேலைகளையும் அது செய்துவரு கிறது. ஆளும் வர்க்கக் கருத்துகளே மக்கள் மனத்தில் ஆழமாக விதைக்கப்பட்டிருக்கும். ஆளும் வர்க்கத்தின் கருத்துகள் அவநம்பி க்கைகளை விதைப்பவை. சாத்தியமில்லை, நடக்காது, நீங்கள் போராடினால் கிடைத்து விடுமா, எதார்த்தத்தைப் புரிந்துகொள்ளுங்கள் என்பவையே அதன் புலம்பலாக இருக்கும். நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெறுவது சாத்தியமற்றது, அசுர பலத்துடன் இருக்கும் மோடி அரசை எதிர்த்த விவசாயிகளின் போராட்டம் தோற்றுத்தான் போகும் என்றே அவை பிரச்சாரம் செய்தன. ஆனால், வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெறுவது அசாத்தியம் என்று கூறிய ஆளும் வர்க்கத்தின் கருத்துகள் பின்னுக்குத் தள்ளப்பட்டு எதார்த்தவாதிகளான விவசாயி களின் போராட்டம் வெற்றிபெற்றது. சேகுவேரா சொல்வதைப் போல் அசாத்தியத்தைச் சாத்திய மாக்கியது.
கனவுகள் பொறுப்புகளை உள்ளடக்கியது
ஆளும் வர்க்கம், அதற்கு எதிரான போராட்டங் களையும் இலக்குகளையும் அசாத்தியம் என்றே கட்டமைக்கும். ஏனெனில், அவை சாத்திய மானால் ஆளும் வர்க்கத்தின் அடித்தளம் ஆட்டம் கண்டுவிடும். எதார்த்தம் ஆளும் வர்க்கம் வீழ்த்தப்படும் என்பதையே உள்ளடக்கமாகக் கொண்டுள்ளது. ஆளும் வர்க்கம் எவ்வளவுதான் தனது கருத்தாக்கத்தை உழைக்கும் மக்களின் மனத்தில் விதைத்தாலும் உழைக்கும் வர்க்கத்தின் புரட்சிகர உள்ளடக்கம் அத்தனையையும் மீறி அசாத்தியங்களைச் சாத்தியப்படுத்துகிறது. ஆளும் வர்க்கம் அசாத்தியம் என்று வகைப்படுத்துவதைச் சாத்தியப்படுத்துவதற்கான நம்பிக்கையை மார்க்சியம் வழங்குகிறது. அதுவே மார்க்சியர்களுக்கு அசாத்தியங்களைக் கனவு காணும் துனிவைத் தருகிறது. நாம் ‘அசாத்தியங்களைக் கனவு காண்பது’ எதார்த்தமற்றதல்ல என்பதை உழைக்கும் மக்களின் போராட்டங்கள் எடுத்துரைக்கின்றன. “மார்க்சிய மரபில் உள்ள இந்த நம்பிக்கை உணர்வு பல பரிமாணங்களைக் கொண்டது. கனவுகள் காணும்போதே பொறுப்புகள் தொடங்கிவிடுகின்றன. கம்யூனிஸ்ட் அறிக்கை (மார்க்சியம்) வழங்கும் நம்பிக்கை ஆதாரமற்றதல்ல. அந்த நம்பிக்கையானது கருத்தியல் ரீதியாகவும் அறிவுப்பூர்வமாகவும் ஒரு அரசியல் கட்டமைப்பை உருவாக்குவதற்கான பெரும் விருப்பத்துடன் பிணைக்கப்பட்டிருக்கிறது. முதலாளித்துவத்துடன் போரிடுவதும், முதலாளித்துவத்தை வீழ்த்துவதுமே முன்னேறிவரும் புரட்சிகர இயக்கத்தைக் கைக்கொள்வதற்கான ஒரே வழி. இந்த வரலாற்றுத் தருணமே அந்த நம்பிக்கையையும் தலையிட வேண்டியதன் அவசியத்தையும் உருவாக்குகிறது. அந்த நம்பிக்கையே அவர் களைச் சிறந்த செயல்பாட்டிற்கு இட்டுச் செல்கிறது. மார்க்ஸ் ஜெர்மனியில் உள்ள கொலோனுக்குச் சென்று ஜெர்மன் தொழி லாளர் சங்கத்தை நிறுவினார். ‘ஜெர்மனி கம்யூ னிஸ்ட் கட்சியின் கோரிக்கைகள்’ எனும் கையேட்டை வெளியிட்டார். அந்த நம்பிக்கையே இம்மாதிரியான செயல்பாட்டில் ஈடுபட வைத்தது. இச்செயல்பாடுகளே வரலாற்றை மாற்றுவதற்கான வழி என்பதை உணர்த்தியது” என்கிறார் மறைந்த மார்க்சிய அறிஞர் அய்ஜாஸ் அகமது.
நம்பிக்கை என்பது செயல்பாட்டுடன் இணைந்ததாகவே இருந்துள்ளது. அதுவே மார்க்சையும் செயல்பட உந்தித் தள்ளியுள்ளது. மக்களுடன் செயலாற்றும்போதும் போராட்டங் களை முன்னெடுக்கும்போதும் ஆளும் வர்க்கத் தின் கொடிய கரங்களை எதிர்கொள்ளும்போதும் நம்பிக்கை பிரவாகம்போல் ஊற்றெடுக்கிறது. இத்தகைய புரட்சிகர நடவடிக்கைகளில் இல்லாமல்போனால் அது வெறும் புரட்சிகர வாய்ச்சொல்லாக மட்டுமே முடிந்துவிடும்.
தற்போதைய நிலையை முற்றாக ஒழித்தல்
மார்க்ஸ், கம்யூனிசம் குறித்த தனது ஆரம்பகாலக் கருத்துக்களை உருவாக்கிய போது, ‘‘கம்யூனிசம் என்பது நம்மைப் பொறுத்தவரை நிறுவப்பட வேண்டிய ஒன்றல்ல; எதார்த்தம் தன்னைத் தானே அதற்கேற்ற வகையில் மாற்றிக்கொள்ள வேண்டிய லட்சிய மாகும். தற்போதைய நிலையை முற்றாக ஒழிக்கும் உண்மையான இயக்கமே கம்யூனிசம் என்கிறோம். தற்போதைய சமூகத்தின் நிலையே இந்த இயக்கத்தின் வெற்றிக்கு அச்சாரம் போடுகிறது’’ என்கிறார். கம்யூனிசம் என்பதே எதிர்காலத்தின் எதார்த்தம். அது பொறுப்பு ணர்வுடன் கூடிய கனவின் வெளிப்பாடு. பொறுப்புகளை நிறைவேற்றுவதே கனவைக் கைகூடச் செய்யும். உலகெங்கும் எழும் உழைக்கும் மக்களின் போராட்டங்கள் அந்தப் பொறுப்புணர்வின் பகுதியே. கோடானு கோடி இந்தியக் குழந்தைகள் பட்டினியோடு வாழும் வேளையில் அம்பானி மகனுடைய திருமண முன்நிகழ்வு 1,200 கோடி ரூபாய் செலவில் நடந்தேறும் கொடுமை நிறைந்த இம்முத லாளித்துவச் சமூகத்தை ஒழிக்கவேண்டியதன் அவசியத்தை அது காட்டுகிறது. அந்த அவசியத்தை நிறைவேற்றுவதையே மார்க்ஸ் முன்மொழிந்தார்.
‘‘கம்யூனிசம் ஒரு யோசனை அல்ல; அது வரலாற்றின் இயக்கங்களுக்கு வெளியே இல்லை. மாறாக கம்யூனிசம் என்பது வரலாற்றின் இயக்கங்களிலிருந்து எழுகிறது’’