states

ஆன்லைன் தளங்களில் ஆசிட் விற்பனை: அம்பலப்படுத்திய பெண் பத்திரிகையாளர்

புதுதில்லி, மார்ச் 10- காதலை ஏற்காத மாணவிகள், பெண்கள், குடும்ப பிரச்சனை உள்ளிட்ட பல சம்பவங்களுக்கு முக்கிய வன்முறை ஆயுதமாக “ஆசிட்” எனப்படும் வேதிக் கலவை உள்ளது. கார வகைகளைச் சேர்ந்த  ஆசிட் மிகவும் வீரியமுடை யது.  ஆசிட்  தோலில் பட்டால் தோலில் டெர்மிஸ் (termis) எனப்படும் சரும பகுதியைச் சேதப்படுத்தி, தோலில் இருக்கும் புரதம் முழுவதையும் உறிஞ்சிவிடும்.  ஆசிட் முகத்தின் மீது விழுந்தால் முகம் முற்றிலும் சேதமடைந்து அழுகிய நிலையில் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிவிடும்.  உயிருக்கு ஆபத்து கூட நேரிடலாம். நாட்டில் பல்வேறு ஆசிட் வீச்சு சம்பவங்கள் அரங்கேறி யுள்ளதால் கழிவறை உள்ளிட்ட வீட்டு உபயோக ஆசிட் வகைகளை தவிர்த்து, மற்ற காரத்தன்மையுள்ள ஆசிட் வாங்க சான்றிதழ் நடைமுறைகள்  மூலம் கட்டுப்பாடுகளாக விதித்து ஒன்றிய, மாநில அரசுகள் கண்காணித்து வரு கின்றன. இதனால் ஆசிட் வீச்சு சம்பவங்கள் ஓரளவு கட்டுக் குள் வந்த நிலையில், தற்போது ஆன்லைனில் தங்கு தடையின்றி “ஆசிட்” கிடைப்பதால் மீண்டும் குற்றங்கள் பெருகி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தில்லி துவாரகா பகுதி யில் 17 வயது பள்ளி மாணவி மீது ஆசிட் வீசிய குற்றத்தில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டபோது, அவர் ஆன் லைனில் ஆசிட் வாங்கியதாக வாக்குமூலம் அளித்தார். வாக்குமூலத்திற்குப் பிறகு விசாரணையில் இறங்கிய மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் ஈ-காமர்ஸ் நிறுவனங்களில் ஆசிட் விற்பனையை கண்டறிந்து நோட்டீஸ் அனுப்பியது.(பிளிப்கார்ட், மீஷோ, அமேசா னுக்கு நோட்டிஸ் அனுப்பியதாக தெரியவில்லை)  இந்நிலை யில் தில்லி மகளிர் ஆணையம் இதுகுறித்து விளக்கம் அளிக்குமாறு பிளிப்கார்ட், மீஷோ, அமேசான் நிறுவனங்க ளுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 2021-ஆம் ஆண்டு இதிலே ஈ-காமர்ஸ் நிறுவனங்க ளில் ஆசிட் விற்பனை உள்ளதாக குற்றச்சாட்டு இருந்தது. ஆனால் ஒன்றிய பாஜக அரசு இதனை அலட்சியமாக கையாண்ட நிலையில், தில்லியில் மீண்டும் ஒரு சிறுமியின் உடல் ஆசிட்டால் சேதமடைந்துள்ளது.  

உண்மையை போட்டுடைத்த  பெண் பத்திரிகையாளர் இந்நிலையில் பத்திரிகையாளர் ஒருவரான ஸ்ரீசிஸ்டி, அமேசானில் ஆசிட் வாங்கியதை ஸ்க்ரீன் சாட் ஆதாரத்தோடு டுவிட்டர் பக்கத்தில் போட்டுடைத்துள்ளார். இதுகுறித்து அவர் டுவிட்டர் பக்கத்தில்,”ஆசிட் ஆன்லைன் ஷாப்பிங் தளங்களை ஆராய்ந்தேன். அது அமேசான் மற்றும் பிற தளங்களில் எளிதாகக் கிடைக்கிறது என்பதைக் கண்டேன். தில்லி சிறுமி மீதான ஆசிட் தாக்குதலுக்கு பின்னர் (டிசம்பர் 20-ஆம் தேதி) அமேசானில் ஒரு லிட்டர் ரூ.189க்கும், டெலிவரி கட்டணமாக ரூ.50 சேர்த்து ரூ.239 கட்டணத்துடன் ஆசிட் ஆர்டர் செய்தேன். அடுத்த 5 நாட்களுக்குள் ஆசிட் கைக்கு வந்தது. வணிக அங்காடிக ளில் நேரில் ஒருவர் ஆசிட் வாங்க முயற்சிக்கும் போது குறைந்தபட்சம் அவரைக் கேள்வி கேட்கும் வாய்ப்பு உள்ளது. ஆனால் இணையத்தில் இருக்கும்போது அவரை யார் கேள்வி கேட்பார்கள்? தற்போதைய நிலை யில் யார் வேண்டுமானாலும் இன்னும் ஆன்லைனில் ஆசிட் வாங்கலாம். ஆசிட் விற்பனைக்கு உச்ச நீதிமன்ற தீர்ப்பு மற்றும் தண்டனை விதிமுறைகள் தடையாக இல்லை” என விமர்சித்துப் பதிவிட்டுள்ளார்.