states

img

கோவில் நிலங்களில் குடியிருப்பவர்களுக்கும், ஏழை, எளிய விவசாயிகளுக்கும் நிலத்தை சொந்தமாக்கிட வேண்டும்

கோவில் நிலங்களில் குடியிருப்பவர்களுக்கும், ஏழை, எளிய விவசாயிகளுக்கும் நிலத்தை சொந்தமாக்கிட வேண்டும். குத்தகை சாகுபடி செய்யும் விவசாயிகளை பொதுஏலம் என்ற பெயரில் நிலத்திலிருந்து வெளியேற்றுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி தமிழ்நாடு அடிமனை பயனாளிகள்- குத்தகை விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் அக்டோபர் 16 திங்களன்று இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அலுவலகங்கள் முன்பு மாநிலம் தழுவிய தொடர் முழக்கப் போராட்டம் நடைபெற்றது. மயிலாடுதுறை சித்தர்காடு பகுதியில் மாநிலச் செயலாளர் சாமி.நடராஜன்,  தஞ்சாவூரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைத் தலைவர் டி.ரவீந்திரன் ஆகியோர் பங்கேற்று உரையாற்றினர்.