states

தீக்கதிர் விரைவு செய்திகள்

12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை, ஜூலை 2- தமிழ்நாட்டில் 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு ள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள் ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் வளி மண்டல  சுழற்சி நிலவுகிறது. மேலும் மேற்கு திசை காற்றின் வேகமாறு பாடு காரணமாக திங்கட்கிழமை (ஜூலை 3) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்க ளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்க ளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னி யாகுமரி, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல் பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண் ணாமலை, விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. செவ்வாயன்று (ஜூலை 4) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலு டன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். நீலகிரி, கோயம்புத்தூர் மற்றும் தேனி மாவட்டங்க ளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும் பெய்யவாய்ப்புள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பொறியியல் கலந்தாய்வு மீண்டும் தள்ளிப்போகிறது

சென்னை, ஜூலை 2- அண்ணா பல்கலைக் கழகத்தின் கீழ் உள்ள 460 பொறியியல் கல்லூரிகளில் 2023-24-ம் கல்வி ஆண்டில் இளங்கலை படிப்பு களுக்கான கலந்தாய்வு திங்களன்று (ஜூலை 2) தொடங்கும் என்று முதலில் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த கலந்தாய்வு  தள்ளிப் போகும் எனத் தெரிகிறது. மருத்துவ கலந்தாய்வுக் கான முதல்கட்ட கலந் தாய்வு தொடங்கிய பின்னர்  பொறியியல் கலந்தாய்வு தொடங்கும் என்று அறி விக்கப்பட்டது.  மருத்துவ சேர்க்கைக்கான கலந் தாய்வு நடத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் தமிழ கத்தில் பொறியியல் கலந் தாய்வு இந்த மாத இறுதி அல்லது அடுத்த மாதம் (ஆகஸ்ட்) முதல் வாரத்தில் தொடங்கும் என்று மாநில அரசு வட்டாரங்கள் தெரி வித்தன. மருத்துவ கலந்தாய்வு இந்த மாதம் 2-வது வாரம் அல்லது 3-வது வாரத்தில் தொடங்கும் என்று தெரி கிறது. இதுகுறித்து அதி காரி ஒருவர் கூறும்போது, ‘மருத்துவ கலந்தாய்வுக்கு  பிறகே பொறியியல் கலந் தாய்வு 4 சுற்றுகளாக குறைந் தது 2 மாதங்கள் நடை பெறும் என்றார்.  ஆகஸ்ட் மாதத்தில் கலந்தாய்வு தொடங்கினால், முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு அக்டோபர் அல்லது நவம் பர் மாதத்தில் வகுப்புகள் தொடங்கும்’ என்றார்.

மீன்கள் விலை ஏற்றம்: மக்கள் ஏமாற்றம்

ராயபுரம், ஜூலை 2- காசிமேடு மீன் சந்தையில்  மீன்கள் விலை அதிகமான காணப்பட்டதால் மீன்விரும்பி கள் ஏமாற்றமடைந்தனர். ஞாயிற்றுக்கிழமை வஞ்சிரம், வவ்வால், பாறை, உள்ளிட்ட மீன்கள் அதிகமாக காணப் பட்டது. பெரியவகையாக இருந்ததால் சங்கரா, பாறை, இறால், கடம்பா போன்ற மீன்களின் விலை ரூ.50 முதல் ரூ.100 வரை விலை கூடுதலாக விற்கப்பட்டன. இதே போல் மற்ற மீன்களின் விலையும் கடந்த வாரத்தை விட சற்று அதிகமாகவே காணப் பட்டது. இதனால் மீன் வாங்க வந்த பொது மக்கள் ஏமாற்றமடைந்தனர். பெரியவகை வஞ்சிரம் ஒரு கிலோ ரூ.1000 முதல் ரூ.1100  வரை விற்கப்பட்டது.